பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணப் பேச்சு 277

‘பாபுராஜபுரத்தில் ஒரு முக்கியமான கல்யாணம், சுந்த ரி. எப்படிப் போவது: காயத்திரியையாவது விட்டுத்தான் போக வேண்டும்போல் இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் நீ வந்து சேர்ந்தாய். பார்த்துக்கொள். சாயங்காலம் வந்துவிடு கிறோம்’ என்று சொல்லி எல்லாரையும் அழைத்துக் கொண்டு லட்சுமியம்மாள் புறப்பட்டுச் சென்றாள்.

“தெய்வந்தான் இவர்களை வெளியில் அனுப்பி வைக்கிறது” என்று எண்ணியபடி சுந்தரி பாகவதரின் அறைக்குள் சென்றாள்.

என்ன வந்தாலும் என்னை அசைக்க முடியாது என்று சொல்லிச் சொல்லி, அசைய முடியாமல் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டீர்களே! தலைவலி, காய்ச்சல் என்று ஒரு நாள் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்க உங்களுக்குப் பிடிக்காதே! என்று வாய்த்த தருணத்தில் சுந்தரி, தன் மனத்தில் உள்ள துயரத்தையெல்லாம் வார்த்தைகளில் வடித்தாள்.

ஒட்டைச் சட்டி போன்ற பொக்கையான உடம் போடு, மனிதனுக்கு இத்தனை கர்வம் கூடாது என்றுதான் பகவான் என் தலையில் ஒரு குட்டுக் குட்டியிருக்கிறார். இதற்கு வருத்தப்பட்டுப் பிரயோசனம் என்ன? லட்சுமி ஏதோ கல்யாணத்துக்கும் போக வேண்டும் என்று கூறி

யிருந்தாளே; போய்விட்டாளா?’ என்று கேட்டார் பாகவதர்.

நீங்கள் துரங்கிக் கொண்டிருந்தீர்கள். எழுப்ப

வேண்டாம் என்று என்னிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்.’

காயத்திரிகூடவா இல்லை?’’

இல்லை. நம் இரண்டு பேரையும் தனியாக விட்டு விட்டு எல்லாரும் போல்விட்டார்கள்.'