பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணப் பேச்சு 281

கொண்டாள். ஆனால் அவள் பேசுவதற்குள் பாகவதர் கேட்டார்; என்னவோ முக்கியமான விஷயம், தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னாயே! இந்த அழுகையைப் பற்றித்தானா?”

சுந்தரி சிரித்துவிட்டாள். ஆமாம். இந்தக் கிண்ட லுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.’

“பின் எதில்தான் எனக்குக் குறைச்சல்? அதையாவது சொல்லு, கேட்கிறேன்.’

இரண்டு பெண்களைப் பெற்று வைத்துக் கொண்டி ருக்கிறீர்களே, அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றிக் கொஞ்சமாவது உங்களுக்குக் கவலை இருக்கிறதா?’’

எல்லாம் நீங்களே சொல்லுங்கள்; நீங்களே கேளுங்கள். - இனி ஒன்றைப் பற்றயும் நான் கவலைப் பட்டு அலட்டிக் கொள்ளக்கூடாது’ என்று நேற்றுவரை நீங்கள் எல்லாரும் டாக்டரோடு கூடிக் கூடிப் பேசினர்கள்; எனக்கு உபதேசமும் செய்தீர்கள். இன்று மனுஷன் கொஞ்சம் கண்ணைத் திறந்தவுடன், கவலைப் படவே இல்லையே-என்று கேட்கீறீர்கள். இனிமேல் நீ என்ன; படைத்த பிரும்மா வந்து சொன்ானல்கூட என்னால் எதற் காகவும் கவலைப்பட முடியாது. கவலைகளுக்கும் ஒருவழி யாக நான் மங்களம் பாடி விட்டேன், பெண்களுக்கு வரன் இனிமேலா பிறக்கப் போகிறார்கள்? நீதான் வசந்தியின் விஷயத்தை ஒருவழியாக முடித்து விட்டாய். இனிமேல் சுலோ ஒருத்திதானே? அவள் பெரிய வீராங்கனை. அவ இக்குப் புருஷனைப்பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க எனக்குச் சாமர்த்தியம் போதாது. புருஷனை அவளேதான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று கூறி மெல்லச் சிரித்தார்,

ஆமாம், வசந்தியின் விஷயத்தை நான் என்னவோ முடித்துவிட்டதாகச் சொல்லுகிறீர்களே! நான் என்ன முடித்துவிட்டேன்? உங்கள் அபிப்பிராயத்தைக் கேட்காமல் அது முடிவாகிவிடுமா?’’

பு. இ.-18