366 புல்லின் இதழ்கள்
- ஏதோ பச்சை தோட்டும் சிவப்பு நோட்டுமா நீ குடும்பத்துக்குக் கொடுத்துக்கிட்டே இருக்கே. அதிலே நானும் பிழைச்சு கிட்டிருக்கேன். எனக்கு என்ன தம்பி
குறைவு? • 2,6b, உன்னெத்தான் கண்ணிலேயே காணல்லே. அன்னிக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷன்லே பார்த்தது; அப்புறம் பார்க்கவே முடியல்லே. மாசம்
முப்பது நாளும் கச்சேரி. ரெயில்லியே சுத்தறாப்பிலே இருக்கு.’
“ஆமாம், மாசம் முப்பது நாளும் ரெயில்லியே கச்சேரி பண்ணிக் கொண்டிருக்கிறேன். அதிருக்கட்டும்; இப்போ என்னை எதற்காகக் கூப்பிட்டாய்?”
என்ன தம்பி, மறந்துட்டியா; நீதானே அன்னிக்குத் தங்கச்சி கல்யாணத்தை முடிச்சுடலாமே, பணம் தறேன்னு சொன்னே. நான், ரெண்டு பொண்ணுக்கும் மாப்பிள்ளை கூடப் பார்த்து வச்சுட்டேன். ஒரே முகூர்த்தத்திலே முடிச்சுப்பிட்டா நமக்கும் செலவு மிச்சம்.’’
- * * * *
இருவரும் பேசிக் கொண்டே காவேரிச் சக்கரப் படித் துறை வரை வந்து விட்டனர். ஹரி யோசனையில் ஆழ்ந்தான்.
பக்கிரி கேட்டான். எப்பத் தம்பி முகூர்த்தம் வச்சுக்கலாம்?
- எவ்வளவு செலவாகும் என்று முன்பு சொன்னாய்?”
- LD TDrrT ரெண்டாயிரத்திே லயும் செய்யலாம்: மூவா யிரத்திலேயும் செய்யலாம். நாம சிம் பிளா, ஆயிரத் ைதந் நூறு ரூபாயிலேயே ரெண்டையும் கட்டிக் கொடுத் திடலாம். எதுக்காகத் தம்பி ஊர்ப் பயலுவளேக் கூட்டிச் சோத் தைப் போட்டுக், காசை வீணாக்கணும்?’ ‘
“ஏன் மாமா, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் எப்படிப் போதும்?’ என்று ஹரி கேட்க வாயெடுத்தான்; ஆனால்