இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ரசாபாசத்துக்கே ராமனும் தருமனும்
ராவண காவியம் ரசித்துப் படிப்பாய்
வம்புக்கு அஞ்சி வறுமையில் வாடேல்
வாதம் புரிவதில் வல்லமை பெறுவாய்
விரக்திக்கு அடிப்படை விதியே யாகும்
வீழ்ச்சி என்பது வீரனுக்கு இல்லை
வெற்றி நிச்சயம் விடாமல் முயன்றால்
வேதத்தால் வளர்வது விதண்டா வாதமே
வையகம் வாழ வைதீகம் வேண்டாம்