பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் காலம் 67 பெருவலிமை உய்த்துணரப்படும். சங்க காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின் இப்போரைப்பற்றிச் சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்கும் அல்லவா? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர் ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக் கூறுவது? சுருங்கக் கூறின் 1 இப்போர்களைப் பற்றிய பாக்கள் சங்க நூல்களில் இல்லை; (2) இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான் 3 சங்க இறுதிக் காலத்தில் இங்ங்னம் ஒரு சோழன் பேரரசனாக இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை, (4) இவன் சிவன் கோவில்கள் பல கட்டினவன். இந் நான்கு காரணங்களையும் நடுவு நிலையினின்று ஆராயின், கோச்செங்கணான் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தல் கூடும் என்ற எண்ணமே பலப்படும். 4. கோங்செங்கணான் தில்லையில் சமயத்தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. 'தில்லை' ஒரு சிவத்தலமாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்படாமை நோக்கத்தக்கது. அது கோச்செங்கணான் காலத்தில் சிறப்புப் பெற்றது. அவன் அங்கு மறையவரைக் குடியேற்றி மாளிகைகள் பல சமைத்தான்". இங்ங்னம் தில்லை சிவத்தலமாகச் சிறப்புற்றமை சங்க காலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது. 5. கோச்செங்கணானுடைய தந்தை பெயர் சுடதேவன் தாயின் பெயர் கமலவதி என்பன என்று சேக்கிழார் கூறியுள்ளார்." இப்பெயர்களைச் சோழப்பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்று கொண்டே கூறினாராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப் பெயர்கள். இங்ங்னம் சங்ககாலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதியசான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி என்றபெயர் ஒப்பு நோக்கத்தக்கது. இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர் சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற்சொன்ன சங்க காலத்திற்குப் பிறகும் அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும். அஃதாவ்து அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 400-600க்கு உட்பட்டது எனக் கூறலாம். இப்பரந்துபட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத்தக்க பொருத்தமான காலம் யாதெனக் காண்போம். - - -