பக்கம்:பொங்கற்பரிசு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரும்பு பூத்தது! பூத்தது

செவ்விதழ் ! அன்பு நல்லாள்

விரும்பு தோளினில் தாமரை

பூத்தது ! பெரும் மகிழ்வே!

3




விண்ணில் வந்ததுபொற்சுடர்!

வந்தது தைத்திருநாள்!

மண்ணில் வந்தது மாபலா
வாழையும் தீங்கரும்பும்!

கண்ணில் வந்தது புத்தொளி!
வந்தது பெரும்பொங்கல்!

மண்ணில் வந்தது மங்கையர்

சிலம்பொலி வாழ்த்திசையே!

4



27
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/35&oldid=1147063" இலிருந்து மீள்விக்கப்பட்டது