உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பட்டர், கர்ப்பூர வில்லைகள் வரிசையாய், அடுக்கடுக் காய், கொளுத்தப் பெற்ற அடுக்குச் சூடத் தட்டை” கைகளில் பற்றி, தனி லயத்துடன் மேலும் கீழுமாக லேசாக அசைத்து அசைத்து ஆட்டி, நடன தீபாராதனை பண்ணி நின்றார். அதற்கேற்ற முறையில் நாதசுரம் தனித் தன்மை யோடு இசை ஒலி எழுப்பியது. மணிகள் ஒலித்தன. அம்மா தாயே, அகிலாண்ட நாயகி என்று பக்தர்கள் பரவசத் துடன் முனகிக் கரங் கூப்பி நின்றனர். ஒளியில் குளிக்கும் மங்களப் பேரொலியாய் காட்சி தந்த அம்பாளின் திரு உருவம், மோகனப் புன்னகையும் ராமலிங் கத்தை என்னவோ செய்தன. அந்தத் திருமுகத்தையே கவனித்து நின்ற அவருசகு அம்பாள் தன்னைப் பார்த்துப் பரிகாசமாய் சிசிப்பது போல் இருந்தது. "சுடுற கஞ்சியை காலில் கொட்டிக்கொண்டதுபோல் தவித்தாயே-நேரமாச்சு, நேரமாச்சு; சீக்கிரம் போகணும் என்று, ரொம்பவும் பரபரப்பு காட்டினாயே! இப்போ பறக்கலியா?" என்று கேட்பதாகத் தோன்றியது. அவர் பார்வை இயல்பாகக் கைப்பக்கம் பாய்ந்தது. மணி என்ன என்று பார்ப்பதற்காக. கையில் கடியாரம் இல்லை. நெஞ்சு திக்கென்றது. ஒருகணம். உடனேயே, கோயிலுக்குத் தானே, வாட்ச் வேண்டாம் என்று அதைக் கையில் கட்டிக் கொள்ளாமலே வந்து விட்டது நினைவில் உறைத்தது. - அகிலாண்ட நாயகியின் சிரிப்பு அழுத்தம் பெற்றதாக அவருக்குப் பட்டது. - - அம்மா, தாயே, அகிலாண்ட நாயகி என்னை மன்னித்துவிடு' என்று உருக்கமாக வேண்டிக்கொண்டு, அன்னையை உள்ளத்தில் நினைத்து, கண்மூடிக் கரம் குவித்து வணங்கி நின்றார் ராமலிங்கம். அவர் அவசரமாகப் பயணம் புறப்பட்டுக்கொண்டு தர்ன் இருந்தார். சிவபுற்த்திலிருந்து பஸ் பிடித்து, ஐந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/74&oldid=855610" இலிருந்து மீள்விக்கப்பட்டது