பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு ஆத்திலே ஊத்துப்பாரு அவள்போற நேர்த்திபாரு மூக்காத்துட்டுக் கொப்பைப்பாரு முக்காட்டையும் சேர்த்துப்பாரு. தண்டட்டி போட்டபிள்ளை தானே வளர்ந்தபிள்ளை கட்டிக் கொடுக்கலேண்ணு முட்டிமுட்டி அழுகிருளே எட்டையா புரத்திலேயும் எட்டுநாள் பாவைக்கூத்து பாவைக்கூத்துப் பார்க்கப்போய்ப் பசுங்கிளியைப் தப்பவிட்டேன். எட்டையா புரத்திலேயும் கட்டுவச்ச தென்னந்தோப்பு மகராசன் தென்னந்தோப்பில் மயில்வந்து மேய்ந்தடையும். சிவகிரி ராசாநம்ம செல்லத் துரைபாண்டியா எங்கும்புகழ் பெற்ற எங்கள் இரக்கமுள் ளதுரையே. கச்சேரி வாசலிலே . லட்சம்பேரு கிற்கையிலே கறுத்தசாமி இல்லாமே கஜளயும் பொருந்தவில்லை. கச்சேரி கண்டபிள்ளை கையெழுத்துப் போட்டபிள்ளை போலீசு கண்டபிள்ளை போதுமடி உன் உறவு. 19 112 118 114 115 116 117 118