உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

59



59. கானங் கிழான் குன்றம்

பாரத மலைகள் எல்லாம் பார்த்து விட்டேன் சோலை, அருவி, சுனை நிறைந்து தினை விளையும் வளமான மலைகளைப் பார்த்திருக்கிறேன். உயர்ந்து ஓங்கிப் பகை நெருங்க முடியாத பெரிய வன்மை வாய்ந்த மலைகளுக்கும் போயிருக்கிறேன். வளம் இருக்கும் மலையில் வலிமை இருக்காது. வலிமை உடைய மலை வளங் கொண்டிராது.

ஆனால் கானங் கிழான் குன்றோ இதற்கு விதிவிலக்கு. அங்கு வளமும் உண்டு. வலிமையும் உண்டு. இரு பண்புகளையும் கொண்ட இணையிலாக் குன்றம் அது.

நாடிவரும் புலவர் எல்லாம் தமது தமது என்று பங்கு வைத்து உண்டு மிகுந்த உணவு நிறைந்து கிடக்கும். அத்துடன் பகை வேந்தரை வென்று திறைப் பொருளும் கொண்டு வரும்.

இவ்வாறு மோசிகீரனார் காணங்கிழான் மலையின் அழகைப் பாடிகிறார்.


60. ஏறைக் கோன் குணம் எவர்க்கு வரும்?

குற்றம் புரிந்த நண்பரைப் பொருத்தருள்வான் பிறருடைய வறுமையைக் கண்டு, நாணம் அடைவான் மூவேந்தர் அவைக்களத்தில் மேம்பட்டு நடப்பான்!

அவன் பெயர் ஏறைக்கோன்! அவன் எங்கட்குத் தலைவன்...