இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
02 மாளிகைக்கு வந்து, தனது படுக்கையில் படுத்துக்கொண்டான் .. அவன் வெளியே சென்று வந்தது யாருக்கும் தெரியவில்லை.
அடுத்த அமாவாசையன்று விக்கிரமன் முன்போலவே புறப்பட்டு ஏழாவது வனம் சென்றான். அங்குள்ள மாளிகையில் வைரக்கற்களாகக் குவிந்து கிடந்தன, அங்கும் பல பேர் கைதிகளாக விலங்கு பூட்டப்பட்டு ஓர் அறையிலே இருந்தார்கள். அவாகளும் எட்டாவது மாளிகையில் உள்ள வர்களைப் போலவே விவரம் சொன்னார்கள், வைரக் கற்களைத் தொட வேண்டாம் என்றும் சொன்னார்கள். விக்கிரமன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் திரும்பி வந்துவிட்டான். நாகவல்லி திரும்பி வருவதற்கு முன்பே அவன் வந்து விடுவதால், அவன் இப்படி ரகசியமாகச் சென்று