இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வானமெங்கும் பொங்கு சுடர்
வைகமெலாம் இன்ப வெள்ளம்
தாங்குமே ஆட்டம்
இன்னிசையாம் பாட்டம்
களிப்பொலியே கேட்டேன்
கையில் ரண்டு காசிருந்ததே
வானமெங்கும் காரிருளே
வையமெலாம் துக்கமயம்
எங்குமே வாட்டம்
இடர்ப்பகையாம் கூட்டம்
அழுங் குரலே கேட்டேன்
அந்தோ கை வெறுங்கையே.