இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திடீரென்று அவள் தோன்றினான்,
அவன் வருகை யாருக்கும் தெரியாது.
வான வில்லென அவன் வந்தான்.
தோற்றத்தில் அவனிடம் புதுமை ஒன்றுமில்லை.
ஆனால் எங்கும் காணாத ஒரு புதுமை ஒளி
அவன் கண்களில் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கனல்,
உணர்ச்சி மின்னலின் கொழுந்து,
ஆத்ம சக்தியின் ஜோதி.
அவன் கம்பீரமான குரலில் பாடினான்,
உள்ளத்தில் எழுந்து மோதும் கனவுகளை யெல்லாம்
காற்றில் பரப்பினான்.
ஒரே சங்க நாதம்.
வேதங்களின் மூச்சு அவன் பாடலில் வீசிற்று.
அமுதத்தின் தெளிவு பொங்கிற்று.
நிலவின் தீஞ்சாறு கொஞ்சிற்று.
வீரக் கனல் துள்ளிற்று.
புதிய உயிர் பெற்றுக் கவிதை ஊறிற்று.
ஆனால் யாரும் அதைக் கவனிக்கவில்லை.
84