இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவன் ஒரு பைத்தியம்
அலைந்து திரிகிறாள்
அன்னையைக் கூவி
அலைகிறான் எங்கும்
அவன் ஒரு பைத்தியம்
தாயின் கோயிலில்
தாழ்ந்தோன் நுழைவதோ?
அழுக்கே மேனி
அரைக் காசில்லை
தாயின் திருமுன்
போவதா அவனும்?
கோயிலின் காவலர்
கோடி நூற் சுவடிகள்
அடுக்கி முன் வைத்தனர்
அடித்துத் துரத்தினர்
அழுதே போனான்
கோயிலைக் கடந்து
குளத்தினைத் தாண்டி
பிணஞ்சுடு காட்டை
அடைந்தனன் இகந்தான்
90