இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விந்தன்
147
‘என்ன?’ என்றார் விக்கிரமாதித்தர்; 'இருந்த வேலையை விட்டுவிட்டு இவள் கேட்ட கேள்விக்குப் பதில் தேடி அலைந்தேன். இப்போது வேலை வேண்டுமே!' என்றான் பாதாளசாமி.
‘என்ன வேலை தெரியும்?’ என்றார் அவர்; ‘ஒரு காலத்தில் சொந்தமாக டாக்சி வைத்து ஓட்டிக் கொண்டிருந்தவன் நான்; அதனால் கார் ஓட்டத் தெரியும்' என்றான் இவன்.
‘அப்படியானால் எங்கள் காரை இனி நீயே ஓட்டலாம்; வா!’ என்று அவனை அழைத்துக்கொண்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் காரை நோக்கி நடக்க, சிட்டியும் அவர்களைத் தொடர்ந்து நடப்பாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு....."
சொன்ன பாதாளக் கதை முடிந்தது