உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

17


ஆக்குதலுக்கு ஆக்கை என்றும்; கட்டுதலுக்கு யாக்கை என்றும் பொருட்கள் உண்டு.

எதைக் கட்டுகிறது? எதை ஆக்குகிறது? உடம்புக்கு இப்படி ஒரு பெயர் ஏற்பட்டது என்றால், நமது உடம்பு பஞ்ச பூதங்களைக் கொண்டு ஆக்கப்பட்டது. உருவாக்கப்பட்டது என்று அர்த்தம்.

பஞ்சபூதங்கள் என்கிற இயற்கையின் கூறுகள் யாவை? பஞ்ச பூதங்களுக்கும் நமது உடல் உறுப்புக்களுக்கும் என்ன சம்பந்தம்? எப்படிப் பொருந்துகிறது என்ற வினாக்கள், நம்மை வெடுக்கென்று கேட்கத் தூண்டுகின்றன!

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற ஐந்து பூதங்கள்தான் இயற்கையின் அம்சங்கள்.

இவை ஐந்திற்கும் என்னென்ன பண்புகள் இருக்கின்றன என்று, இயற்கையில் வாழ்ந்த, இயற்கையால் வாழ்ந்த சித்தர் பெருமக்கள், சிறப்பாக ஆய்ந்தறிந்து தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

1. ஆதார நிலமாக பூமி அமைந்து இருக்கிறது. அதற்கு சக்தி இன்பம் என்று பெயர்.

2. பூமிக்கும் மேலே நீர் பரவியிருக்கிறது. அதை சுனை இன்பம் என்று கூறுவர்.

3. நீருக்கும் மேலே நெருப்பு எரிகிறது. அதை ஒளி இன்பம் என்று கூறுவர்.

4. நெருப்புக்கும் மேலே காற்று ஊடாடிக் கொண்டிருக்கிறது. அதை உயிர்ப்பு இன்பம் என்று கூறுவர்.