பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களுக்கு வாத்தியென வாய்ந்த மருக்கொழுந்தைக்
கக்கும் அனலில் கசக்க அழைப்பீரோ?
தையற்றொழில் அன்னம் தாமரைப்பூ வைமறந்து
வெய்யிற் சுரத்திடையே வீழ்த்த அழைப்பீரோ?
வீட்டுக் கணக்கெழுதும் வித்தகத்தை அவ்விழவில்
போட்டுக் குலைக்கப் பொறாமை உமக்கமோ?
காவியங்கள் கற்றுக் கவிசெய்து நல்லநல்ல
ஓவியங்கள் தீட்டும் உயர்புலமைத் தேவியினை
வம்புக் கிழுக்க வசமாமோ சொல்லிடுவீர்?
அம்மையீர், நல்ல அறிவும் திருவுமுறும்
சீமாட்டி தன்னைத், திருவிளக்கைக் கல்வியெனும்
மாமேட்டில் வீற்றிருக்கும் மங்கைக் கரசிதனைச்
சொந்தக் கணவனுடன் சேய்கள் தொடர்பறவே
எந்நிமிஷமும் பிரிதல் ஏற்றதல்ல என்றுரைப்பேன்.
நிர்மலமாங் கல்வி நிறைந்தாள் இருந்தகுடி
சர்வகலா சாலை எனத்தகுமே! அவ்வம்மை
ஊமைஎன இருந்தாள் உங்கள் அழைப்புக்கே!
தீமை புரியாதீர்” என்று தெரிவித்தான்!
இல்லக் கிழத்தி எதிரிருந்த மங்கைதனை
முல்லை மலர்ந்த சிரித்த முகங்காட்டி,
தோழி, விழாவுக் கழைத்தாய் அதுவேண்டாம்;
வாழி உலகென்றாள் வாய்ந்து.

 

24