நா. பார்த்தசாரதி
111
“நீங்க தங்கமான மணிசரு சாமீ! தெய்வத்துக்குச் சமானமா எங்கேருந்தோ தொணைக்கு வந்து வாய்ச்சிங்க...”
“என்னம்மா அப்படிப் பெரிசாச் செஞ்சிட்டேன்? எல்லாரும் செய்யிறதைச் செஞ்சேன்! என் தலையிலேயா நீ: நடந்துவரே? ஏதோ துணை வேணும்னே? சரின்னு கூடக் கூட்டிட்டு வந்தேன்.”
இருவரும் மாறனேரியைக் கடந்தாய்விட்டது. தலை வெட்டிப் பள்ளம் இன்னும் இரண்டு பர்லாங் தூரம். இருந்தது. திடீரென்று அந்தப் பெண் கேட்டாள்: -
“சாமீ நீங்க பொடி போடுவீங்களா சாமீ?”
“ஏம்மா...? போடுவேன் வச்சிருக்கியா?... இருந்தாக் கொடேன்!”
“நிறைய இருக்கு சாமீ! தர்ரேன். போடுங்க.” - அந்தப் பெண் தன்னிடமிருந்த் துணி மூட்டையை அவிழ்த்து ஒரு முழுப் பொடி மட்டையைப் புதிதாக அவரிடம். நீட்டினாள்.
ஐயர் மட்டையை அவிழ்த்துப் பொடியை எடுத்தார்.
“என்னம்மா.இது? முக்குப் பொடி மணமே இல்லியே? வேறே ஏதோ வாடையில்லே அடிக்குது?”
“மூட்டையிலே சந்தனம் வச்சிருக்கேன் சாமி! அதுனோட வாடை பட்டிருக்கும்...”
“என்னமோ? நீ சொன்னாச் சரி எங்கிட்டவும் வேறே மட்டை இல்லே!.. இதைத் தான் போட்டுக்கணும்” - ஐயர் இரண்டு மூன்று சிட்டிகை பொடியை இழுத்தார். அங்கணப் பரதேசி மடத்துக்குப் போவதற்குள் மட்டையையே காலி செய்துவிட்டார்.
அந்தப் பெண் சிரித்துக் கிளுகிளுத்துக் கொண்டே வாய். ஆரட்டைக்குக் குறைவின்றி அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தாள். இன்னும் இருபது இருபத்தைந்து கெஜம் நடந்தால், தலைவெட்டிப் பள்ளத்திற்குள் இறங்கிவிடலாம்.