பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மெளனப் பிள்ளே யார் சேர்த்துவிடு. மெயில் ஸார்ட்டிங் வண்டியிலே இந்தக் குட்டி பிரயாணம் செய்வது நல்லது என்று ஒரு ஜந்துவைக் கொண்டு வந்து விட்டார். அவர் அதைக் குட்டி' என்று சொன்னரே யொழிய அது நாலைந்து குட்டி போட்டிருக்கு மென்று ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ரயில்வேக்காரனுக்கு ஐந்து ரூபாய் காசு தராது ஏமாற்றும் சாகஸ்த்தை என் னென்பது ? ஏகாம்பரய்யர் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கும் கொஞ்சம் மண்ணெண்ணெயும் தன் மாமனர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இவ்வளவையும் ராமநாதன் வாங்கி ரயிலில் மெயில் வானில் அடுக்கிக் கொண்டான். எல்லோருக்கும், 'ஆஹா, பேஷாய்க் கொடுத்து விடுகிறேன் ' என்று சொல்லி விட்டுக் குறிப்பிட்ட தன் வண்டியில் போய் உட்கார்ந்தான். அவ னுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இவ்வளவு சாமான் களையும் கொண்டு போய்ச் சேர்ப்பதென்ருல் லேசாயிருக் கிறதா ? அவன் பேசாமல் ரயிலில் படுத்துத் தூங்கினன். ஊரார் தந்த வஸ்துக்களும் அந்த ஜந்துவும் ஒரு மூலையில் கதம்பமாய்க் கிடந்தன. டில்லி ஸ்டேஷனுக்கு முன் ஸ்டேஷ ளிைல் ராமநாதன் கண் விழித்து எழுந்தான். அனந்த ராமய்யர் அனுப்பிய அந்த நாயைக் காணவில்லை. அதன் பக்கத்தில் வைத்திருந்த செருப்பையும் காணுேம். எழுந்து ஸ்டேஷனில் இறங்கிப் பார்த்தான். நாய் செருப்பைக் கெளவிக்கொண்டு பிளாட் பாரத்தின் கோடியில் ஒடிக் கொண்டிருந்தது. துரத்திக்கொண்டு போய்ப் பிடித்து வரலாமென் ருல், அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது. இந்தத் தர்ம சங்கடத்திற்கு என்ன செய்வது? 蜂 டில்லியில் ரயிலேவிட்டு ராமநாதன் இறங்கியதுதான் தாமதம். அவரவர்கள், என் தாத்தா என்ன அனுப்பினர் ? என் பாட்டி என்ன அனுப்பினுள் ? என்று ரயிலடிக்கே வந்து விட்டார்கள். எல்லோரையும் பட்டாளம் போல அழைத் துக் கொண்டு அருகிலிருந்த கூட்ஸ் ஷெட்டுக்குப் போய்