உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருவனுக்கு பன்னிராண்டு பருவத்தவளை
தானமாகத்தருவது அயலார் மணமுறை
தமிழ்ப் பண்புக்கு முரணான ஒன்று
முந்நீர் வழக்கம் முன்னை ஆரியர்க்கு இல்லை
ஆற்றுநீர் ஊற்று நீர் மழை நீர் என்ற
மூன்றும் ஒன்று திரண்ட பெருங்கடலே முந்நீர்
பெருநீர் ஓச்சுதல் தமிழனுக்குப் பிறப்புரிமை
திரவியம் தேட திரைகடல் ஓடுவான்
அதனைப் பொருள் வயிர் பிறிதல் என்றார்
கல்விக்குப் பிரிகின்ற கடப்பாடும் உண்டு
போருக்கும் தன்னை பணயம் வைத்து போவான்
வேட்டை மேற் செல்வதும் வீரவழக்கே
மற்றபடி குலமென்றும் நலமென்றும்
இளங்காதலரைப் பிரித்ததில்லை
குலம் என்பது குடிப்பெயர் அல்லது
பிறப்பினால் வேற்றுமை குறிப்பது அன்று
சீரும் வரிசையும் சிறப்பின் கொடையே
விலங்கின மாற்ற விலைப் பொருளல்ல
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஒன்றேகுலம் ஒருவனே தேவன்
என்பதே அவன் சமுதாய மனப்பாங்கு
வீரமும் காதலும் அவனுடன் பிறப்பு
உணவு கொண்டு உடலைப் போற்றினான்
உடைகொண்டு உணர்வைப் போற்றினான்
தீதற்றதே அறமெனக் கண்டான்

28