பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கள்ளத் தொடர்புடையோர்-என்றும் காதற் கரையறியார்!-வெட்டுப் பள்ளத்தைக் கண்டோடும் மழைநீர்ப் பண்போ காதலடி? காதல் சிறப்புணராக் கயவர்கள் கண்டபடி சொல்லுவார்! உலகில் சாதலும் வாழ்வதும்-பிறர்க்காகத் தாழ்வதும் காதலடி! ஈதலும் காதலடி! இசைபட இருத்தலும் காதலடி! எண்ணியென்னி நோதலும் காதலடி! அதன்திறம் நுவலத்தான் கூடுவதோ? 24-10-71 வாணிதாசன்