பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፮ கைதியை மறவர் காத்து வருவர்" என்றனர்! அரசனும் ஏற்றுக் கொண்டான்! ஆண்டுகள் சென்றன! அமைதியாய்க் கைதி உண்டு கொழுத்தே ஊரின் நடுவில் இருந்த வேலிச் சிறையில் இருந்தான்! கைதியைக் காக்கும் செலவு வரவரப் பெருகி வந்தது! பெரும்பொருள் அழிந்தது! செய்வ தறியாது திகைத்தான் அரசன்! அமைச்சன் ஒருவன் அரசனை அண்டிக் 'கைதியைக் காக்கும் காவ லாளை நீக்கினால் கைதி நில்லாது ஓடுவான்' என்றனன் அரசனும் ஏற்றான் முடிவை வேலிச் சிறைக்குள் வெகுநாள் சென்றும் கைதி ஓடக் கண்டார் இல்லை! உணவுக் காக ஒவ்வொரு நாளும் வந்தே உணவை வாங்கி உண்டு வேலிச் சிறைக்கு விரைவான் கைதி! கைதிக்குத் தப்பும் கருத்தே இல்லை! அரசன் ஒருநாள் கைதியை அழைத்து விடுதலை அளித்தேன் வெளிச்செல்’ என்றான்! கைதி தலைமேல் கையைக் கூப்பி வேண்டாம் விடுதலை வேண்டாம் விடுதலை:உணவும் உடையும் ஊரில் யாரே தருவார் எனக்குத் தப்பித்துப் போனால்? ஆனால் அரசே! அடியே னுக்குத் திங்கள் தோறும் சிறுபொருள் கொடுத்தால் இங்கில் லாமல் ஓடுவேன்' என்றான் திங்கள் தோறும் சிறுபொருள் அரசன் கொடுத்தே வந்தான்! கொலைகாரக் கைதி அமைதி யாக அண்டை நாட்டில் வாழ்ந்து நாள்கடத் தினனே! క్షs: ஆ 65 7 0 7 5 8 Q 85 30 9 |