பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தடை வேண்டும் பெருத்த மக்கள் இந்திய நாட்டின் பெருநோய் ஆனாரே! - முத்தம்மா!-கொல்லும் கொடுநோய் ஆனாரே! . கருத்தடை செய்வதே பொருத்தம் நாட்டின் கவலை நீங்கிடுமே!- முத்தம்மா! கவலை நீங்கிடுமே! இந்த நாட்டில் பிறக்கும் குழந்தை எண்ணிக்கை கூறட்டுமா?-முத்தம்மா! எண்ணிக்கை கூறட்டுமா? இந்த நாட்டின் பிறப்பு இறப்பின் ஏற்றம் சொல்லட்டுமா?-முத்தம்மா! ஏற்றம் சொல்லட்டுமா? ஒவ்வொரு நாளும் சேலத்து மக்கள் ஊருள் பிறக்கின்றார்!-இந்திய ஊருள் பிறக்கின்றார்! ஒவ்வொரு பத்து நாளும் சென்னை ஊரார் பிறக்கின்றார்!-முத்தம்மா! ஊரார் பிறக்கின்றார்! பத்தாண் டுக்குள் பதினைந்து கோடி மக்கள் பெருகிவிட்டார்!-முத்தம்மா! மக்கள் பெருகிவிட்டார்! - செத்தவர் குறைவு பிறப்பவர் மிகுதி செய்யும் வழியாதாம்?--ழுத்தம்மா! செய்யும் வழியாதாம்?