பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கற்றவர்கள் வியக்கின்ற தனித்தமிழ்மா மேதை! கலையுலகில் எழுத்துலகில் தனிப்பாதை கண்டோர்! மற்றவர்கள் துயர்காணின் மனங்கலங்கும் சான்றோர்! வாய்இனிக்கச் சுவைகுன்றாச் சொல்லாளர் அண்ணா! வற்றாத பேராறும் வளம்கொழிக்கும் கன்செய் மலைக்காடும் நனிகிறைந்த தமிழகத்தை ஆளப் பெற்றெடுத்தோர் பெயர்வாழ்க! தமிழ்மக்கள் வாழ்க! பெரும்புகழில் நமதண்ணா வாழ்கபல ஆண்டே!" 22–8–67 為