உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அகவை நிரம்பிய இந்நூலாசிரியர் பி.எஸ்.சி. எல்.டி., வித்துவான். பி.ஏ. எம்.ஏ.பி.எச்.டி. பட்டங் கள் பெற்றவர்.ஒன்பதாண்டு கள் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரா கவும் (1941-50) பத்தாண்டு கள் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும், (1950-60) ப தி னே ழு ஆண்டுகள் திருப்பதி திரு வேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்துறைத் தல்ை வராகவும், பே ரா சி ரி ய ராகவும், (1960-77) பணி யாற்றி ஓய்வு பெற்றவர். ஒய்வு பெற்றபின் பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி-1979 ஜூன்) கலைக்களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். நலாயிரத் திவ்வியப் பிரப் பந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பி.எச்.டி) பட்டம் பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். தவிர ஆசிரியம் (5) இலக்கியம் (15), வாழ்க்கை வரலாறு (1), சமயம் (12), திறனாய்வு (9), அறிவியல் (14), ஆராய்ச்சி (4) -என்று 48 அரிய நூல்களின் ஆசிரியர். இனிமை, எளிமை, தெளிவு இவை இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்பகளாகும்.

Wrapper Printed at : Eskay Art Printers, Madrases. Phone: 841478