123
மகப்பெறு படலம்
மரஞ்செறிந்த காடடர்ந்து விளங்கி ஓங்கும்
மலைச்சரிவில் இளைஞரொடு வேட்டம் போகி உரஞ்செறிந்த விலங்கினத்தை எதிர்த்துக் கொல்ல உவகையோடு திரிதருவான்; இவனைத் தாக்க முறஞ்செவிய களிறுகளும் முழக்கங் காட்டும்
மொய்யுளைய அரியினமும் வருதல் காணின் குறிஞ்சியகம் எதிரொலிக்க இடிபோல் ஆர்த்துக்
குதித்தவற்றின் மேற்பாய்ந்து கொன்று மீள்வான் 243
வேட்டைஎனிற் பெருவிருப்பம்; கான்வி லங்கின்
வேந்தனெனில் தனிவிருப்பம்; முழக்கம் ஒன்று கேட்டுவிடின் உருமுழக்கம் இவனும் செய்வான்;
கிளர்ந்தெழுவான்; ஆதலினல் இளைஞ ரெல்லாம் வேட்டெழுந்து படையென்னத் திரண்டு தம்முள்
வீரனிவன் தலைவனெனத் தேர்ந்து கொண்டார்; காட்டுகின்ற பெருவலியால் கார்மு ழக்கால்
கண்டவர்தாம் கோளரிஎன் றழைக்க லுற்ருர். 244
- _
மொய் உளைய-மொய்த்த பிடர்மயிரிகாயுடைய.
குறிஞ்சியகம்-மலையகம், உரும் முழக்கம்-இடிமுழக்கம்,