இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
214
இயல் 103
மறுநாள் போர்செய வந்தமா வேழனை உசவோய்நீ யாரென உசாவினன் கோளரி.
இன்றேனும் மாவேழன் வலிமை காண்போம்
என நினைவான் போலெழுந்தான் கதிரோன் வானில்: என்றேனும் களரிதனில் தளர்வு காணு
ஏற்றமுறு மாவேழன் வந்து நின்ருன்; நின்ருனைக் கண்டாற்கு முன்னுள் போல
நெகிழ்ந்துள்ளம் பரிவுகொள அருகிற் சென்று "குன்றேறு போல் நிற்கும் முதியோய்! உண்மை
கூறிவிடு! போர்வேண்டா; யார் நீ வீர! 424
எனை மீறி உன்பாலோர் அன்பு கொள்ள
எழுமுணர்வை மனத்துடிப்பை அறியாய் ஐய! முனைவேழன் எனப்படுவோன் நீயோ? இன்றேல்
முதுமையுறும் நின்பெயர்தான் யாதோ? வீணில் புனைபேரால் ஏமாற்ற முனையேல்! உண்மை
புக் லுதியேல் வீண்போரே நமக்குள் இல்லை; தினையேனும் பகையின்றி நண்ப ளுவேன்;
செப்புதிநீ யாவ'னென வணங்கிக் கேட்டான். 425
களரி-போர்க்களம். புகலுதியேல் - சொல்வாயானல்,