வீரகாவியம் 50
இயல் 22
மாவேழின் காதலைத்தன் தோழி கூற மனமகிழ்ந்தாள் இனவாசி துள்ளித் துள்ளி.
வழியின்மேல் விழிசெலுத்தி வரவு நோக்கி
வளரிளமைக் கனவுகளில் மிதந்து நிற்கும்
விழியழகி இளவரசி திருமுன், துTது
வென்றியுடன் மீண்டவளும் வந்து நிற்க,
அழிபசியன் அமுதுண் ண விரைதல் போல
ஆர்வமுடன் துடித்தெழுந்து தோள்கள் பற்றி
'எழிலறிவு மிகுதோழி! கனியோ? காயோ?
எடுத்துரைப்பாய் அவருரைத்த வெல்லாம்' என்ருள். 83
தோள் பற்றிப் புகழ்ந்துரைத்தோய்! என்பால் மாற்றம்
சொல்லும் நிலை அவற்கில்லை; நின் க ருத்தை வாள் பற்றும் அவன் பால்முன் எடுத்து ரைக்கும்
வாய்ப்பொன்றும் எனக்கில்லை' என்னு முன்னர்த் தேள் கொட்டி முடித்ததுபோல் துடித்து வஞ்சி,
'தீவினையேன் காதலுங்கைக் கிளையோ? அந்தக் கேள்பற்றி வாழ்வதுதான் வாழ்வே யன்றிக்
கெடுவாழ்வு யான்வேண்டேன் மாய்வேன்' என்ருள், 84
அழிபசி - மிக்கபசி கைக்கிளை ஒருவர் மட்டும் விரும்புதல். கேள்-உறவு