இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம் 64
'உனையடைய வேண்டுமெனும் நோக்கம் ஒன்றே
உந்துவதால் என்னியல்பால் உரைத்து விட்டேன்; எனையடைய உனக்கிசைவு தந்தை தந்தால்
எனக்கதன்மேல் பேறுண்டோ வெல்க' என்ருன்; மனையடையும் நேரம்மிக ஆயிற் றென்று
மதிவந்து முகங்காட்டப் பிரிந்து செல்லத் தினையளவும் மனமிலராய் விலகிச் சென்ருர்;
திருமணத்து நினைவுடனே துயிலச் சென்ருர். 117
நஞ்சுமிழும் முழுமதியை வானிற் கண்டார்;
நலிவுதரும் தென்றலெனும் காற்றைக் கண்டார்; பஞ்சனையின் பெயராலே விரித்து வைத்த
பாழ்நெருஞ்சிப் பரப்பினையே அங்குக் கண்டார்; விஞ்சுமணப் புகைபரவ, வெய்து யிர்த்து
விடும்புகையாய் அதுபரவிச் சூழக் கண்டார்; வெஞ்சரமாய்ம் பூச்சரங்கள் தெரியக் கண்டார்;
விழிகுவியாக் கனவுலகில் மிதந்து சென்ருர். 118
காட்சிப்படலம்
முற்றும்.
சரம்-அம்பு