பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கூட்டுறவு சங்கத்தைக் கூடிடச் செய்ததும்,
சிதம்பரம் சென்றவண் சேர்த்துப் பலரை
இதம்பெறும் வழிகளை இயம்பிய ஒன்றும்,
தஞ்சைக் குழுவினைச் சார்ந்துநின் றவரின்
நெஞ்சம் திரும்பிட நிகழ்த்திய ஒன்றும்,
கொழும்பிற் கப்பல் பங்குகள் கொண்டதும்,
அழும்படி வந்த* வதன் ஆபத் தறுத்ததும்,
தேசம் மதித்திடும் சிவசிதம் பரத்தை
ஏஜண்டாக ஏற்படுத் தினதும்,
அவண்சில வணிகரை அடுத்துக் கொண்டதும்,
அவண் சில இடங்களில் அறைந்தபிர சங்கமும்,
- சூரற்றுச் சென்றதும், தொன்னெறிக் காங்கிரஸ்
வீரமற் றழிந்ததும், ! வேறொன் றாயதும்,
திலகர் முதலிய தேசபக் தர்கள்
பலமுறை என்னோடு பகர்ந்து நின்றதும்,
3 சென்னைச் கிளையின் செக்கிரட் டெரியா
மன்னி யிருக்க வரம்எனக் கீந்ததும்,
“சிவமொடு சேர்ந்து செப்பிய பலவும்
தவமுயர் பாரதத் தாயைத் தொழுததும்,
||நான்கு நெறிக்கு நானே சென்று
தேன்கனி என்னவென் சிந்தையுள் நிற்கும்
33 குருநாத நண்பனைக் கொணர்ந்ததும், கப்பலின்
வருமான வழிகளை வளர்த்ததும், பிறவும்.
தேய ஆட்சியைத் திருப்பிடச் செய்யும்
மாயச் செயலென மதித்து மயங்கித்










அதன்-கப்பல் கம்பெனியின்.
+ சூரற்-சூரத் காங்கிரஸ்.

  • வேறொன்று-இந்தியன் நேஷனலிஸ்டு காங்கிரஸ்.

நேஷனிலிஸ்ட் காங்கிரஸின் சென்னை மாகாணக் காரியதரிசி.
|| திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நாங்கூனேரி எனும் ஊர்.
33 குருநாதன்-எட்டுக் குருநாதய்யர்.
56

 

56