பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

சிறையதிகாரிகள் மூடத்தனம்.


அறைக்குள் திண்ணைமேல் அலுத்தியான் இருந்தேன்.
“நின்றிட இங்கியான் நீவீர் இருப்பதென்”
என்றனன் ஜயிலர். “ஏகுதற் காய
விதிவர விலை” என விளம்பினேன் அவனுடன்
"பதிலுரை தருவதைப் பார். இவர் உடுத்திய
ஆடையை அவிழென அறைந்தனன் : தடியரென்
ஆடையை அவிழ்த்தனர். “அரைஞாண்” என்றனர்.
“அரைஞாண் எங்ஙனம் அங்குற்ற" தென்றான்
“அரைஞாண் என்றும் அங்குள” தென்றேன்.
சென்றான் அத்துடன் ; சிரித்தேம் நாங்கள்.
நின்றான் :பார்த்தான் ; நினைந்தான் : போயினான்.
பிறகெமை நெருங்கிப் பேணிப் பணிந்தெம்
சிறகென நின்று செய்தனன் உதவிகள்.

 

86