F.2 என்றவாறு. தொல்காப்பியம் - இளம்பூரணம் நீளிரு முந்நீர் வளிகலன் வௌவலின் ஆள்வினைக் கழிந்தோர் போற வல்லதைக் கேள்பெருந் தகையோ டெவன்பல மொழிகுவ நாளுங் கொண்மீன் றகைத்தலுந் தகைமே; கல்லெனக் கவின் பெற்ற விழவாற்றுப் படுத்தபிற் புல்வென்ற களம்போலப் புலம்புகொண் டலமவாளோ; ஓரிரவைகலுட் டாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல சீநீப்பின் வாழ்வாளோ எனவாங்கு; பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே" (கலி பாலை -ச) என்றமை எனவரும். இதனுள் "யாம் நமக்குச் சிறந்தனமர்த லறிந்தனிராயின் யாலும், "பொய்க் நல்கல் புரிர்தனை" என்றமையாலும் வரைவதன்முன்பென்று கொள்ளப்படும். இவன் இறந்துபடும் என்றமையால் உடன் கொண்டுபோவது குறிப்பு. போக்கற்கண்ணும் என்பது 'உடன் கொண்டு பெயர் என்று கூறுதற்கண்ணும் ஆள்பவர் கலக்குற எலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தொடு பைதல்கொண் டமைவாளோ; எனவரும். உதாரணம்:- "மரையா மதில்சுரை மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்னோடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்கும் உடுமைய காடென்றால் என்னீ ரறியாதீர் போல் விவைகூறல் நின்னீர அல்ல நெடுந்தகா யெம்மையும் அன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு"(கலி-பாலை -கு] விடுத்தற்கண்ணும் என்பது தலைமகள் உடன்போக் கொருப்பட்டமை தலைமகளுக் குக் கூறி அவளை விடுத்தற்கண்ணும் என்றவாறு. உதாரணம்:- "உன்னங் கொள்கையொ டுளங்கரந் துறையும் அன்னை சொல்லு முய்க வென்ன தாஉம் ஈரஞ் சேரா வியல்பில் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் சவ்வையு மொழிக நாடுக ணகற்றிய வதியஞ் சோற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவவினி வாழி தோழி யவரோ