பொருளதிகாரம் - புறத்திணையியல் மல்குறு கான லோங்குமண லடைகரை தாழடம்பு மலைந்த புணரிகளை ஞால் விலங்குகதிர் முத்தமொடு வார்துக் ரெடுக்குந் தண்கூடற் படப்பை மென்பா லனவும் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா னூனோடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங் குன்றுதலை மணந்த வன்புல கைப்பும் கால மன்றியுங் கரும்புய்த் தொழியா தரிகா லவித்துப் பல் வழவர் தேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய முழவிமிழ் மூதூர் விழவுக்காணுஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலும் ஏன அழவர் வரகும் திட்ட காண்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புவந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணைமெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவ மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குால் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடா அய் முழங்கு மந்திரத் தருந்திறன் மரபிற் கடவுட் பேணி உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி எறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநில எனதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்துசேண் டழங்குகுரன் முரசே" [பதிற்றுஙய] வென்றோர் விளக்கமும்-வென்றோர்மாட்டு உள் தாகிய விளக்கமும்.