தொல்காப்பியம் - இளம்பூரணம் அஃது அன்று ஊர்ச்செரு லீழ்ந்த அதன் மறனும்-அஃது ஒழிய ஊர்ச்செருவின் சுண் வீழ்ந்த பாசிமறனும். ('மற்று' என்பது அசை.] உதாரணம்:- மதில்மிசைக்கு லோர் பக்கமும். உதாரணம்:- "பாயினார் மாயும் வகையாற் பலகாப்பு மேயினா ரேய விகன்மறவ-ராயினார். ஒன்றி ற வூர்ப்புறத்துத் தார்தாங்கி வென்றி யமரர் விருந்து."[வெண்பா-நொச்சி -உ] இவர்ந்த மேலோர் பக்கமும்-மதின்மேற்கோடற்குப் பரந்த மதி 'அகத்தன வார்கழ னோன்றா ளரணின் புறத்தன போரெழிற் றிண்டோள் - உறத்தழீஇத் தோட்குரிமை பெற்ற துணைவிளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான்." [வெண்பா-நொச்சி -எ] 68 இகல் மதில் குடுமி கொண்ட மண்ணும் மங்கலமும்-தம்முடன் இசலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலம் கொண்ட மண்ணும் மங்கலமும். உதாரணம்:- எங்கண் மலர வெயிற்குமரி கூடிய மங்கல நாள்யா மகிழ்தூங்கக் - கொங்கலர்தார்ச் செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி." [வெண்பா - உழிஞை - உஅ] வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற-வென்ற வாளின் மண்ணும் மங்கலமும் பொருந்த. உதாரணம்:- "தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக் கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்து மிடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான். புடையா ரறையப் புகழ்." [வெண்பா-உழிஞை-உஎ] தொகையிலை அம்மதிலழித்தமையான் பட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி யடைதல். உதாரணம்:- மற்றுள்ள மதில்கள்வரைப்பில் மாறு "வென் றுலந்த திரிய வேண்டுபுலத் திறுத்தவர் வாடா யாணர் காடுதிறை கொடுப்ப நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக் கலம்பிறங்கு வைப்பிற் கடற்றிரை யாத்தநின் றொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற் கோள்வன் முதலைய குண்டுகண் ணாபூழி