பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் கூஎஅ. வெயிலென் கிளவி மழையினி லையும். இதுவும், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. ளஉஎ இ-ள்:-வெயில் என் கிளவி மழை இயல் நிலையும் - வெயில் என்னும் கிளவி மழை என்னும் சொல்லியல்பின் கண்ணே நிலைபெற்று அத்தும் இன்னும் பெற்று முடியும். உ-ம். வெயிலத்துக்கொண்டான் ; வெயிலிற்கொண்டான்;சென்றான், தந்தான், போயினான் எனவரும். கூஎகூ. சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த வுருபிய னிலையும். (அஉ) இது, வகாரவீற்றுப் பெயர் நான்கினும் சுட்டுமுதல் வகரம் மூன்றற்கும் வேற் றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-சுட்டு முதலாகிய வகர இறுதி - சுட்டெழுத்தை முதலாகவுடைய வகார வீற்றுச்சொல், முற்பட கிளந்த உருபு இயல் நிலையும் - வேற்றுமைக்கண் முற்படச் சொன்ன உருபுணர்ச்சியின் இயல்பு நிலைபெற்று வற்றுப் பெற்றுப்புணரும். உ-ம். அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவரும். 'முற்படக்கிளந்த' என்றதனான், வற்றினோடு இன்னும் பெறுதல்கொள்க அவற்றின்கோடு, இவற்றின்கோடு, உவற்றின்கோடு ; செவி, தலை, புறம் எனவரும். ஙஅடு. வேற்றுமை யல்வழி யாய்த மாகும். இது, மேலவற்றிற்கு அல்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. (அங) இ-ள்:- வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும் - அச்சுட்டுமுதலாகிய வகரவீறு வன்கணம் வந்தால் வேற்றுமைப்பொருட்புணர்ச்சியல்லாத அல்வழிக்கண் அவ் வகரம் ஆய்தமாய்த் திரிந்துமுடியும். உ-ம். அஃகடிய, இஃகடிய, உஃகடிய; சிறிய, தீய, பெரிய எனவரும். (அச கூஅக. மெல்லெழுத தி ைஎல்வெழுத் தாகும். இது, மேலனவற்றிற்கு மென்கணத்து முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- மெல்லெழுத்து இயையின் அ எழுத்து ஆகும்- அச்சுட்டு முதலாகிய அகரவீறு மென்கணம் வந்து இயைந்தவிடத்து அவ்வகரம் அம்மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். உ-ம். அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண்; நூல், மணி எனவரும். ஙஅஉ. எனவை புணரி னியல்பென மொழிப. (அரு) இது, மேலவற்றிற்கு இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் முடிபு கூறுகின்றது. இ-ள்:- எனவை புணரின் இயல்பு என மொழிப அச்சுட்டு முதலாகிய வகரவீறு ஒழிந்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் அவ்வகரம் திரியாது இயல்பாய் முடியும். உ-ம். அவ்யாம், இவ்யாழ், உவ்யாழ்;வட்டு, அடை, ஆடை என ஒட்டுக. (கூ)