________________
எழுத்ததிகாரம் - மொழிமரபு உக இ-ள்:- அவற்றுள் மேற்கூறப்பட்ட மூன்றனுள்ளும், ரகாரம் முகாரம் குற்று ஒற்று ஆகா-ரகாரமும் குறிற்கீழ் ஒற்றாகா. அவை நெடிற்கீழ் ஒற்றாம்; குறிற்கீழ் உயிர்மெய்யாம். உ-ம். தார், தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய் நின்றன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு விலக்கினமையின், யகரம் பொய் எனவும் கோய் எனவும் இரண்டி டத்தும் ஒற்றயிற்று, குற்றொற்று என்பது குறிதாகிய ஒற்று எனப் பண்புத் தொகை. குறிற்கீழ் நித்தலான், குறியது எனப்பட்டது. ஈண்டுக் குறில் நெடில் என்கின்றது மொழிமுதல் எழுத்தினை என உணர்க. இது மேல் வரையறை இல எனப்பட்ட உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு ஓர் வரையறை கண்டு கூறி னவாறு. ருரு. குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்ஸா நெட்டெழுத் திய. ரகார (சக) இ- ன்:-குறுமையும் செடுமையும் அளவின் கோடவின்-உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலில், தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயவ - தொடர்மொழிக்கீழ் நின்ற முகாசங்களெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பையுடைய (என்று கொள்ளப்படும்.) உ-ம். அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க. ‘புலவர்' என்றந்போல இரண்டு மாத்திசையை இறந்த தன் பின்னும் வருமா லெனின், அவையும் "தன்னின முடித்தல்' என்பதனால் 'நெடிற்கீழ் ஒற்று' எனப் படும். எல்லாம் என்றதனான், ரகார ழகாரங்களேயன்றி, பிற ஒற்றுக்களும் 'நெடிற் கீழ் ஒற்று ' எனப்படும். இதனானே, விரல் திது என்புழி லகரம் 'கெடிற்கீழ் ஒற்று என்று கெடுக்கப்படும். ருக. செய்யு றுதிப் போறு மொழிவயின் னகார மகார மீரொற் றாகும். இது, செய்யுட்கண் ஈரொற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: செய்யுள் இறுதி போலும் மொழிவயின் - செய்யுள் இறுதிக்கண் போலும்' என்னும் மொழிக்கண், னகாசம் மகாரம் ஈர் ஒற்று ஆரும்-காரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும். ['போலி' எனவும் பாடம்.] உ-ம். "எம்மொடு தம்மைப் பொரு உங்காற் பொன்னெடு, கூவிளம் பூத்தது போன்ம்" எனவரும். ரு உ. னகார முன்னர் மகாரங் குறுகும். (கஅ) இஃது, "அரையளபு குறுகன் மகர முடைத்து (நூன்மரபு - க௩] என்ப தற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- னகாரம் முன்னர் மகாரம் குறுகும் - (மேற்கூறப்பட்ட) காரத்து முன்வந்த மகாரம் மாத்திரை குறுகிநிற்கும். (ககூ)