பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

F நான்காவது - புணரியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகள், (மேற் செய்கை யோத் துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட் மேல் மொழிமரபிற் கூறிய மொழிகள் புணருமாறு உணர்த்தினமையின் மொழிமரபினோடு இயைபுடைத் தாயிற்று. டது. ளச. மூன்று தலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறோடு நெறிநின் றியலும் எல்ல மொழிக்கு மிறுதியு முததும் மெய்யே யுயீரென்றாயீ ரியல. இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், மொழிமரபினுள் முதலும் ஈறும் கூறியவழி உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என மூன்றாய் விரிந்துநின்றதனை உயிரும் மெய்யும் என இரண்டாகத் தொகுத்தலானும், அவ்வழி இருபத்திரண்டு எழுத்து மொழிக்கு முதல், இருபத்துநான்கு எழுத்து மொழிக்கு ஈறு எனக்கூறு லின், முப்பத்து மூன்று எனப்பட்ட எழுத்து நாற்பத்தாறு ஆவனபோல விரிந் த்தனை அவையெல்லாம் முப்பத்து மூன்றினுள்ளனவே எனத் தொகுத்தலானும் விரிந்தது தொகுத்தல் நுதலிற்று. அறு இ-ள் :- மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்- மூன்றனை முடிவிலே யிடப்பட்ட முப்பதாகிய எழுத்தினுள், இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது அவ்விரண்டினை முடிவிலே யிடப்பட்ட மொழிக்கு முதலாய இருபதும், நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்-இருபத்துநான்கு ஈற்றொடு வழக்குநெறிக் கண் நின்று நடக்கும், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்-மூவகை மொழிக்கும். ஈறும் முதலுமாவன, மெய் உயிர் என்று அ ஈர் இயல-மெய்யும் உயிருமாகிய அவ்வி ரண்டு இயல்பினையுடைய. உம். மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும், முதலும் ஈறும் ஆயின இருபத்திரண்டு எழுத்து முதலாவன பன்னிரண்டு உயிரும் ஒன்பது உயிர் மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமும் என இவை. இருபத்து நான்கு எழுத்து ஈறா வன பன்னிரண்டு உயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக்குற்றிய லுகரமும் என இவை. 'ஈற்றொடு' என்பது ['ஈறொடு' என] விகாரத்தாற்றொக்கது. மெய் முற் கூறிய வதனால், நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா தென்பது கொள்க. ('என்று' என்பது எண்ணிடைச்சொல்.] ளரு. அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல். (4) இது, (மேற்கூறியவாற்றான் தனிமெய்யும் முதலாவான் சென்றதனை விலக்க லின்,) எய்தியது விலக்கல் நுதலிற்று.