________________
தொல்காப்பியம் - இளம்பூரணம். . ளகச. உயிரும் புள்ளியு மிறுதியாகி அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி உளவெனப்பட்ட வெல்லாச் சொல்லுந் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்னத வருடம் காலர் தோன்றின் ஒத்த தென்ப வேயென் சாரியை. இஃது, அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணரு மாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-உயிரும் புள்ளியும் இறுதியாகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உள எனப்பட்ட எல்லா சொல்லும்-உயிரும் புள்ளியும் ஈறாய் அளவையும் நிறையை யும் எண்ணையும் கருதி உளவென்று சொல்லப்பட்ட எல்லாச்சொற்களும், தம் தம் கிளவி தம் அகப்பட்ட முத்தைவரும் காலம் தோன்றின் ஏ என் சாரியை ஒத்தது என்ப - தமக்கு இனமாகிய சொற்களாகிய தமக்கு அகப்படும் மொழியாயுள்ளன தம்முன்னே வரும் காலம் தோன்றுமாயின் ஏ என்னுஞ்சாரியை பெற்று முடி தலை பொருந்திற்று என்ப. உ-ம். உழக்கேயாழாக்கு, கலனே பதக்கு என இவை அளவுப்பெயர். தொடி யேகஃசு, கொள்ளேஐயவி என இவை நிறைப்பெயர். காணியேமுந்திரிகை, காலே காணி என இவை எண்ணுப்பெயர். உயிரீறு புள்ளியீறு என்றதனானே, என்சாரியை பெறாதனவும் உளவென்று கொள்க. குறுணி நானாழி எனவரும். ள சாரு . அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை யியற்கை. இஃது, எய்தியது விலக்குதல் நுதலிற்று. (22) இ-ள்:- அரை என வரும் பால் வரை கிளவிக்கு புரைவது அன்று சாரியை இயற்கை - அரை என்றுசொல்ல வருகின்ற பொருட்கூற்றை யுணரநின்ற சொல்லிற் குப் பொருந்துவ தன்று மேற்கூறிய ஏ என் சாரியை பெறும் இயல்பு. உ-ம். உழக்கரை, தொடியரை, ஒன்றறை எனவரும். இஃது "ஒட்டுதற் கொழுகிய வழக்கு' [புணரியல்-கூய] அன்று என்றபதனான் விலக்குண்ணாதோவெனில், 'தம்மகப்பட்ட' என்று வருமொழியையும் வரைந்தோதின் மையின் இதற்கு அவ்விதி செல்லாதென்பது (ஆல் என்பது அசை.) ளசாசு. குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை. இஃது, எய்தியது விலக்கிப் பிறி துவிதி உணர்த்துதல் நுதலிற்று. (உங) இ-ள்:- குறை என் கிளவிமுன் வருகாலை - குறை என்னும்சொல் அளவுமுத லியவற்றின்முன் வருங்காலத்து, நிறைய தோன்றும் வேற்றுமை இயற்கை நிறையத் தோன்றும் மேல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபிற்குச் சொல்லும் இயல்பு.