பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


12அஅ. திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டம், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றிற்கு நாடாளுமன்றச் சட்டங்களும் திரிபுரா மாநிலச் சட்டமன்றச் சட்டங்களும் பொருந்துறுதல் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ) ஒரு மாவட்ட மன்றம் அல்லது வட்டார மன்றம் சட்டங்களை இயற்றுவதற்குரியவை என இந்த இணைப்புப்பட்டியலின் 3 ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த திரிபுரா மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், காய்ச்சிவடிக்கப்படாத வெறியம் கலந்த மதுக்குடிவகை எதனையும் உட்கொள்வதைத் தடை செய்கிற அல்லது கட்டுப்படுத்துகிற திரிபுரா மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அத்தகைய மாவட்டத்திற்கான அல்லது அத்தகைய வட்டாரத்தின்மீது அதிகாரவரம்பு கொண்டுள்ள மாவட்ட மன்றம் பொது அறிவிக்கையின் வாயிலாக, இரு நேர்வுகளில் எதிலும், அவ்வாறு பணித்தாலன்றி, அந்த மாநிலத்திற்குள் உள்ள தன்னாட்சி மாவட்டம் அல்லது தன்னாட்சி வட்டாரம் எதற்கும் பொருந்துறுதல் ஆகாது; மேலும், அந்த மாவட்ட மன்றம் அத்தகைய சட்டம் எதனையும் பொறுத்து அவ்வாறு பணிக்கும்போது, அந்தச் சட்டத்தினை அத்தகைய மாவட்டத்திற்கோ வட்டாரத்திற்கோ அவற்றின் பகுதி எதற்குமோ பொருந்துறச் செய்கையில், அந்த மாவட்ட மன்றம் தக்கதெனக் கருதுகிற விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அது செல்திறம் பெறும் எனப் பணிக்கலாம்;
(ஆ)ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக, இந்த உள்பத்தியின் (அ) கூறின் வகையங்கள் பொருந்துறாத திரிபுரா மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அந்த மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டத்திற்கு அல்லது தன்னாட்சி வட்டாரத்திற்குப் பொருந்துறாது என்றோ அல்லது அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாவட்டம் அல்லது வட்டாரம் அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறும் என்றோ பணிக்கலாம்.
(இ) குடியரசுத்தலைவர், நாடாளுமன்றச் சட்டம் எதனையும் பொறுத்து, அறிவிக்கை வாயிலாக, திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கு அல்லது தன்னாட்சி வட்டாரத்திற்கு அது பொருந்துறாது என்றோ அல்லது அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாவட்டத்திற்கு அல்லது வட்டாரத்திற்கு அல்லது அதன்பகுதி எதற்கும் பொருந்துறும் என்றோ பணிக்கலாம்; மேலும், அத்தகைய பணிப்புரை எதுவும் முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்.

12ஆ. மிசோரம் மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றிற்கு நாடாளுமன்றச் சட்டங்களும் மிசோரம் மாநிலச் சட்டமன்றச் சட்டங்களும் பொருந்துறுதல் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ)இந்த இணைப்புப்பட்டியலின் 3ஆம் பத்தியில் ஒரு மாவட்ட மன்றம் அல்லது வட்டார மன்றம் சட்டங்களை இயற்றுவதற்குரியவை எனக் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த மிசோரம் மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், காய்ச்சிவடிக்கப்படாத வெறியம் கலந்த மதுக்குடிவகை எதனையும் உட்கொள்வதைத் தடைசெய்கிற அல்லது கட்டுப்படுத்துகிற மிசோரம் மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அத்தகைய மாவட்டத்திற்கான அல்லது அத்தகைய வட்டாரத்தின்மீது அதிகாரவரம்பு கொண்டுள்ள மாவட்ட மன்றம், பொது அறிவிக்கையின் வாயிலாக, இருநேர்வுகளில் எதிலும், அவ்வாறு பணித்தாலன்றி, அந்த மாநிலத்திற்குள் உள்ள தன்னாட்சி மாவட்டம் அல்லது தன்னாட்சி வட்டாரம் எதற்கும் பொருந்துறுதல் ஆகாது; மேலும், அந்த மாவட்ட மன்றம், அத்தகைய சட்டம் எதனையும் பொறுத்து அவ்வாறு பணிக்கும்போது, அந்தச் சட்டத்தினை அத்தகைய மாவட்டத்திற்கோ வட்டாரத்திற்கோ அவற்றின் பகுதி எதற்குமோ பொருந்துறச்செய்கையில், அந்த மாவட்ட மன்றம் தக்கதெனக் கருதுகிற விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அது செல்திறம் பெறும் எனப் பணிக்கலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/254&oldid=1466510" இலிருந்து மீள்விக்கப்பட்டது