பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/126
தலைப்பைச் சேர்::“மக்கள்தான் முக்கியமான முதன்மையான ஆக்க சக்தி; படைப்பாளி, வரலாற்றின் உண்மையான அகப்பொருள்”[1]
என்பது மார்க்சியம்.
சைவ சித்தாந்தம் கடவுளை, மனிதனைவிடச் சிறந்த பொருளாகக் கொள்கிறது. ஆனால், உயர் பொருளாக இருக்கிற கடவுள் மனிதனைக் கொத்தடிமைப்படுத்துவது அல்லது உயிர்களிடத்தில் தற்குறை மனப்பான்மையைத் தோற்றுவிப்பது உயர் மனப்பான்மையல்ல.
இயல்பான வளர்ச்சியில் கூட வேற்றுமைகள் இருப்பது இயற்கை; இதற்கு மார்க்சியம் உடன்படுகிறது. கடவுளை மனிதனுக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் தோழனாகவுமே சைவ சித்தாந்தச் சமயம் கருதுகிறது.
- ↑ 15