பல்லவர் வரலாறு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பல்லவர் வரலாறு






டாக்டர். மா. இராசமாணிக்கனார்







திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,

522, டி.டி.கே. சாலை, சென்னை-18.

அணிந்துரை


இராவ்பகதூர் C.M. இராமசந்திரஞ் செட்டியார், பி.ஏ., பி.எல்.

ஆணையாளர், இந்து அறநிலையப் பாதுகாப்புக் கழகம்.


பல்லவர் வரலாறு என்ற இந்நூல் மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ளது. நாளிதுவரை வெளிவந்துள்ள பல நூல்களை ஆராய்ந்து நாட்டின்கண் மறைந்து கிடக்கும் பல சான்றுகளைக் கண்டுபிடித்துப் பல இலக்கியங்களிற் கண்ட குறிப்புகளைத் தெரிந்தெடுத்து அவற்றை ஒழுங்குபடத் தொகுத்துத் தமிழ்நாட்டிற்கு ஒர் அரிய பெரிய ஆராய்ச்சி நூலாக இதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். படிப்பு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பல ஏடுகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடுவார்போல் அல்லாது, உண்மைச் சான்றுகளை அறியவேண்டிப் பல இடங்களுக்கும் நேரிற் சென்று ஆராய்ந்த பொருள்களை விடாது ஒழுங்குப்படுத்தியிருப்பதே இந்நூலுக்கு ஓர் அரிய மதிப்பு ஆகும். இதனைப் போலவே மற்றத் தமிழ் அரசர் பரம்பரைகளுக்கும் தமிழ் நாடுகளுக்கும் வரலாற்று நூல்கள் வெளிவருவது ஒரு சிறந்த முறையாகும். அந்தப் பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் கழகத்தார் அருஞ்செயலும் போற்றத் தக்கதே.

பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள்வரை தமிழ்நாட்டில் மன்னர் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றும், அவர்களுடைய பண்டைக்குலம் இன்னவென்று உறுதியாகக் கூறுவார் இல்லை. வடமேற்கு நாட்டிலிருந்து வந்த அயலவர்கள் என்றும், ஈழநாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும், தென்னாட்டிலேயே இருந்தவர்கள் என்றும் பலவழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஒருவிதக் கோட்பாடு முளைத்து நிலைநின்று கொண்டிருந்தது. அந்தக் கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக் கொண்டு வருகிறது. அஃது என்ன எனில், எந்தக்குலம் அல்லது பரம்பரையை எடுத்துக்கொண்ட போதிலும் அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அந்நாடு ஏறக்குறைய இந்தியாவிற்கு வடமேற்கில் இருக்கக் கூடும் என்றும் சொல்லி, அதற்காகப் பலவகைச் சான்றுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆகும். இவ்வகைக் கோட்பாடு பல்லவர் தொடக்கத்திற்கும் வருவிக்கப்பட்டது. ஆகவே, பெயரை நோக்கிப் பாரசீக நாட்டிற்கும் பல்லவர் தொடக்கம் கொண்டு போகப் பட்டது. அவ்வரசர்கள் வடமொழியில் அக்கரை எடுத்துக் கொண்டிருந்ததனால் இக்கூற்று வலியுறுத்தலும் செய்யப் பட்டது. ஆனால், ‘அம் மன்னர்கள் ஏன் தமிழ் மன்னர்களாக இருக்கக்கூடாது?’ என்பதுதான் இப்போது கேட்கப்படுகிற கேள்வி. அக் கேள்வியை மறுப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் என்று அறிய வேண்டும். இங்கிலாந்தில் ஜார்ஜ் I ஜெர்மானியனாக இருந்த போதிலும் அவனது மரபு ஆங்கிலத்தில் கலந்து ஆங்கிலமாகி விடவில்லையா! அதுபோலவே பல்லவரும், ஒருவேளை, வெளி நாட்டிலிருந்து புகுந்திருந்த போதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன அல்லவா? உண்மையில் அம் மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமே என்பதற்கு எதிரிடை வாதம் யாதுமில்லை என்னலாம். ‘பல்லவர்’ என்ற சொல் தமிழ் அல்லவா? இப்போது பல் நீண்டுள்ளவனைப் ‘பல்லன்’, ‘பல்லவன்’ என்று கேலி செய்வதில்லையா அம் மன்னவரில் மூல புருடனுக்குப் பல் நீண்டு இருக்கலாம். அச்சொல் அம் மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக் காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல் கொண்ட ஒரு மன்னனுக்கு அப்பெயர் நிலையத்திருக்கிறது. முடப் பாண்டியன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே ஏற்பட்டன. மேலும், பல்லவர்கள் காடவர் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள் (காடு வெட்டி நகரத்தின் பெயர் காண்க. இஃது இப்போது ‘கார்வெட்டி நகரம்’ எனப்படுகிறது) அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. அவை பிற்காலப் பெயர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவற்றையே தமிழ் நூல்கள் ஆதரிக்கின்றன. ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயர். ‘போது’ என்பது மலருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். மலையாளத்தில் கொங்கு அரசன் ‘போது’ என்ற சொல் எருமைக் கடாவில் வந்து போர் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. (கொங்குப் படை வரலாறு காண்க.)

இப்போதும் தொண்டை நாட்டிலும் அதனைச் சுற்றிலும் போத்தராச கோவில்கள் உண்டு. இவை பல்லவர் காலத்து வழக்கு என்று அறியக்கூடும். அக் கோவில்களை அரச பரம்பரையினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர் தமிழ் நாட்டினரே என்று கொள்வதே தகுதி என்னலாம்.

பல்லவப் பெருமக்கள் வடமொழிக்குப் பல உதவிகள் புரிந்துள்ளார்கள். அதற்குக் காரணம் அக்காலத்தில் வடநாட்டு நாகரிகம் தெற்கே பரவத் தொடங்கியதே. எந்த இயக்கமும் முதலில் அதிகமாகப் பாராட்டப் படுவது இயற்கை; பின்னர், அதன் வேகம் குறைந்து விடுவது வழக்கம். பல்லவ அரசு தொடங்கிய காலத்தில் வடக்கே இருந்த பெளத்தமும் சமணமும் வந்தன. அவற்றின் குரவர்கள் தம்மோடு வட மொழியைக் கொண்டுவந்தார்கள். காஞ்சி அச் சமயங்கட்கு நடுநாயகமாக விளங்கியது. பல்லவ மன்னர்களும் அவற்றை ஆதரித்தனர். ஆகவே, வடமொழிக்கு ஏற்றம் தரப்பட்டது. ஆனால், நாள் ஆக ஆக அவ்வேற்றம் குறைந்தது. தமிழின் மேம்பாடு தொடங்கியது. அம் மேம்பாட்டிற்கு ஆதரவு தந்தவர்கள் சைவ வைணவ சமய ஆசிரியர்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் 5, 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழை ஆதரித்தனர். சமணமும் பெளத்தமும் நிலை குலைந்தன. சைவ வைணவங்கள் மேலிட்டுத் தமிழை ஆதரித்தன. இவ்வியக்கங்களுக்குப் பல்லவர்களே காரணர்களாக இருந்தனர். அவர்களால் ஆயிரக் கணக்கான சமய நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ்மக்கள் பெருமையும் விரிந்தது.

பல்லவர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகளுள் சிறந்தவை கோயில்களே. அதுவரை மண்தளி (கோவில்)களாக இருந்தவை கற்றளிகளாக மாற்றப்பட்டன. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து குடை கோவில்களைக் கண்டனர். (இப்போது குகைக் கோவில்கள் என்கிறார்கள்.) குடை கோவில்கள் சமணர்களுடைய பழக்கத்தின்மேல் ஏற்பட்டவை என்று கூறவேண்டும். பண்டைக் குடை கோவில்கள் சமணர்கள் தவத்திற்காகக் குடைந்தவையே. அதனைப் பின்பற்றிப் பல்லவர்கள் குடை கோவில்களை ஆக்கினார்கள். (மகேந்திரவர்மன் சமணனாக இருந்து சைவனாகிக் குடை கோவில்களை முதலில் குடைந்தவன்.) பிறகு தனிப் பாறைகளைக் கோவில்களாகச் செதுக்கினார்கள். (மாமல்லைச் சிற்பத் தேர்களைக் காண்க.) பிறகு கற்களைப் படிமானம் செய்து கட்டடமாகக் கட்டினார்கள். (மல்லைச் சலசயனப் பெருமாள் கோவில்,திருத்தணிகை வீரட்டானேசர்கோவில்) இம்மூன்றுவகைக் கோவில்களும் பல்லவர்கள் சமைத்தவையே. இவற்றைப் பின்பற்றியே சோழர்கள் பெருங் கோவில்களை எழுப்பினார்கள். ஆகவே, பல்லவர்களே கோவில் அமைப்பிற்கு மூல புருடர் என்று கூறல்வேண்டும். அவர்கள் காலச் சிற்பங்களை வெகு எளிதில் கண்டுகொள்ளலாம். தூண்கள் கன சதுரங்களும் இடையில் 8 பட்டைகளும் கொண்டுள்ளன. துவார பாலகர்கள் இரு கைகள் கொண்டுள்ளார்கள். திருமால் எறியும் படை தரித்தவர். இலிங்கத்திற்குப் பின் சோமஸ்கந்தமூர்த்தி உண்டு. இச்சின்னங்கள் இருப்பின் பல்லவர் கோவில் என்றறிக. இவர்கள் காலத்தில்தான் யானை முதுகு அல்லது ‘தூங்கானை மாடம்’ என்ற விமானம் தோன்றியது. (திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் விமானம் காண்க.) மேலும், கல்வெட்டுச் சாசனங்களுக்கும் பல்லவர் முதன்மை தந்தார்கள். இவர்கட்கு முன் கல்வெட்டுகள் வெகு குறைவு. அவை பிராமி எழுத்தில் இருந்தன. பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தம் என்று கூறும் அழகிய எழுத்துக்கள் ஆளப்பட்டன. அவ்வெழுத்துக்களின் அழகு பார்த்தால்தான் தெரியும். (கயிலாசநாதர் கோவிலிற் காண்க.) பிறகு தமிழை அதிகமாகப் போற்றத் தொடங்கியவுடன் பல்லவர்கள் தமிழிலேயே எழுதினார்கள். அன்றுமுதல் இப் புது இயக்கம் வெற்றியடைந்தது. ஆகவே, பல்லவர்களாலே சமயமும் தமிழும் போற்றப்பட்டதை நாம் அறியவேண்டும்.

இத்தன்மையான ஒரு பெரிய மன்னர் குடும்பத்தைப் பற்றி நாம் நன்றாக அறிய வேண்டாவோ! அதனை அறிவிப்பதற்காகவே திரு.வித்துவான் மா.இராசமாணிக்கம் பிள்ளை. பி.ஓ.எல். அவர்கள் இவ்வரிய நூலை வெளியீட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் இதனை நன்றாகப் படித்துத் தம் பண்டைப் பெருமையை அறிவார்களாக அறிவது மாத்திரம் அன்றிப் பல்லவர் நாகரிகம் தோன்றிநின்ற நிலையங்கள், ஊர்கள், சான்றுகள் முதலியவற்றை முற்றும் தெரிந்துகொண்டு, அங்கங்கே சென்று அவற்றைப் பெருமிதத்துடன் நோக்குவார்களாக

நம் மக்கள் இந்த முயற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டுத் தமிழர் நாகரிகம் முழுவதையும், பலவிதங்களிலும் வெளியிட்டும் அறிந்தும் போற்றுவார்களாக.

சென்னை.

கோவைகிழார்,

25-2-44.

முகவுரை

பல்லவர் வரலாறு என்னும் இவ்வாராய்ச்சி நூல் தமிழகத்திற்குப் புதியமுறையில் தரப்படும் தமிழ் விருந்தாகும், பல்லவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பலவும், கட்டுரைகள் பலவும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தமிழில் இதுகாறும் செம்மையுற எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ் வரலாற்று நூற்குப் பிறகு வெளிப்போந்த ஆராய்ச்சி நூல்கள் பல: சிறந்த கட்டுரைகள் பல; கிடைத்தகல்வெட்டுச்செய்திகள் பல. மேலும், அவ்வரலாற்று நூல் இன்று கிடைக்கு மாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப் பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்ப்படுகின்றனர். இக் குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.

பல்லவர் காலத்து இலக்கியங்களும், ஏறத்தாழப் பல்லவர் காலத்தை நன்முறையிற் படம் பிடித்துக் காட்டும் பெரிய புராணமும் தமிழ்க்கருவி நூற்களாகக் கொள்ளப்பெற்றன. இந்நூலின்கண் புதிய வரலாற்று முடிபுகள் பல குறிக்கப் பெற்றுள. அவை ஆராய்ச்சியாளர் நடுவுநிலைமை வழாத ஆராய்ச்சிக்கு உரியவாகும். அவற்றுள், இடைக்காலப் பல்லவர் போர்கள், நெடுமாறன் முதல் விக்கிரமாதித்தன் போர் (நெல்வேலிப் போர்), கந்தசிஷ்யன் மீட்ட ‘கடிகை’, இராசசிம்மன் காலத்துப் போர்கள் என்பன குறிக்கத்தக்கன.

வடமொழிக் கல்வெட்டுகளையும் வடமொழியில் உள்ள மத்த விலாசத்தையும் எனக்குப் படித்துக்காட்டி என்னுடன் இருந்து ஆராய்ந்தவர் - சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆராய்ச்சி மாணவராக இருந்தவரும், இன்று பெல்காம்-லிங்காரசுக் கல்லூரி வரலாற்று விரிவுரையாளராக இருக்கின்ற வருமாகிய திருவாளர் வேதம் - வேங்கடராய சாத்திரியார், M.A., ஆவர். இவரது உதவி என்றும் மறக்கற்பாலதன்று. என்னைப் பாகூருக்கு அழைத்துச் சென்றவரும், பாகூரைப்பற்றி விளக்கமான படம் வரைந்து உதவியவருமாகிய திருவாளர் புதுவை ரா. தேசிகப்பிள்ளை, B.A.,B.L., அவர்கள் உதவி பாராட்டற் பாலது. எனக்குக் காஞ்சியில் பல வசதிகள் அளித்து எல்லாக் கோவில்களையும் என் விருப்பம்போற் காண வசதி செய்துதந்த ‘குமரன்’ அச்சக உரிமையாளர் திருவாளர் குப்புசாமி முதலியார் அவர்கட்கும் எனது நன்றி உரித்தாகுக. இங்ஙனமே மகாபலிபுரம், வல்லம், மண்டபப்பட்டு, திரிசிரபுரம் முதலிய இடங்களில் எனக்கு வேண்டிய வசதிகள் செய்து பல்லவர் குகைக் கோவில்களைக் காணச்செய்த பெருமக்கட்கு எனது அன்பு உரியதாகும்.

பல்லவர் வரலாற்றை அறிய அரும்பாடுபட்ட பெரியோர் அனைவர்க்கும் பல்லவர் வரலாறு திறம்படஎழுதிய பேரறிஞர்கட்கும் என் வணக்கமும் நன்றியும் உரிய ஆகுக. அப் பெருமக்கள் உழைப்பின் பயனே இந்நூல் வெளிவரச் செய்தது என்றால் மிகையாகாது.

இரண்டு ஆண்டுகளாக என்னை இப்பணியில் ஈடுபடுத்தி இதனை நன்முறையில் வெளிக்கொணர்ந்த சென்னை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும், இதற்கு அணிந்துரை எழுதிய திருவாளர் கோவைகிழார் அவர்கட்கும் எனது உளமார்ந்த நன்றி உரித்து.

சேக்கிழார் அகம்
சென்னை
மா.இராசமாணிக்கம்

பொருளடக்கம்

1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் 1-14

தமிழகம்- பாண்டியநாடு - சோழநாடு சேர நாடு - தொண்டை மண்டலம்-செங்கட்டுவன்காலம் - கரிகாலன் காலம்-புதிய சான்று - வடநாட்டு நிலைமை - கோச்செங்கட் சோழன் - காஞ்சியின் பழைமை - மாமல்லபுரம் - வலியற்ற வடஎல்லை.

2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் 14–24

இலக்கியச் சான்றுகள் - ஊர்களின் பெயர்கள் - குகைக் கோவில்களும் கற்கோவில்களும் - பட்டயங்களும் கல்வெட்டுகளும் -பிறநாட்டார்குறிப்புகள்-ஆராய்ச்சியாளர் உழைப்பு - நூலாசிரியர் பலர்.

3. பல்லவர் யாவர்? 24-35

பல திறப்பட்ட கூற்றுகள் - பல்லவர் தமிழர் அல்லர் - தொண்டை நாடும் சங்க நூல்களும் - எல்லைப்போர்கள் - சாதவாகனப்பெருநாடு - விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - இக்குவாகர் - பிருகத்பலாயனர் - ஆனந்தர்-சூட்டுநாகர்-பல்லவர்-பல்லவரும் தொண்டைநாடும் - பல்லவர் அரசம்ரபினரே - காடவர் முதலிய பெயர்கள்.

4. களப்பிரர் யாவர்? 36-42

களப்பிரர் - களப்பிரர் பல்லவர்போர்கள் - சோணாட்டில் களப்பிரர் - பாண்டி நாட்டில் களப்பிரர்.

5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) 43–49

மூவகைப் பட்டயங்கள் - பிராக்ருதப் பட்டயங்கள் - மயித வோலுப் பட்டயம் - ஹிரஹதகல்லிப் பட்டயம் - குணபதேயப் பட்டயம் - இவற்றால் அறியத் தக்கவை - வடநாட்டு வென்றி - சிவஸ்கர்ந்தவர்மன் காலம்- பிறர் கூற்று-முடிபு - இக்காலப் பல்லவர்.

6. இடைக்காலப் பல்லவர் - (கி.பி. 340-575) 50–73

சுற்றுப்புற நாடுகள் -விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - ஆனந்தர் - சூட்டுநாகர் - கதம்பர் - கங்கர் - தமிழகத்தரசர் - அகச்சான்றுகள் . புறச்சான்றுகள் காலவரையறை - குழப்பமான காலம் - பலவகைப் போர்கள் வாகாடகர் போர் - வாகாடகர் படையெடுப்பு - கடிகா என்பது காஞ்சியன்று கடிகா என்பது யாது? - முடிவு - திருக்கழுக் குன்றம் கல்வெட்டு - பல்லவர் கதம்பர் போர்கள் - முடிவு - பல்லவர் சோழர் போர் - சாளுக்கியர் தோற்றம் - பல்லவர் சாளுக்கியர் போர்கள் - போர்களின் பட்டியல்.

7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900) 74–77

இக்காலச் சிறப்பு - இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்.

8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615) 78-86

சிம்மவிஷ்ணு காலம் - சிம்மவிஷ்ணு சிறப்பு - போர்ச் செயல்கள் - ஆதிவராகர் கோவில் - சிம்மவிஷ்ணு கலை வல்லவன் - புலவர் புரவலன் - இவன் காலத்து அரசர்.

9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) 87-108

முன்னுரை - இரண்டாம் புலிகேசி - படையெடுப்பு - பல்லவர் கங்கர் போர்- சமணமும் சைவமும் - இவன் காலத்தரசர்- மகேந்திரன் அமைத்த கோவில்கள் - கோவில் அமைப்பு - பல்லாவரம் குகைக் கோவில் - பல்லவபுரம் - வல்லம் - மாமண்டுர் - மகேந்திரவாடி - தளவானுர் - சீய மங்கலம் - மண்டபப்பட்டு - திருச்சி மலைக்கோவில் - நாமக்கல் மலைக்கோவில் - மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும் - இக்கோவில்கட்கு மூலம் - மகேந்திரன் கல்வெட்டுகள் - மகேந்திரன் பட்டப் பெயர்கள் - மகேந்திரன் வளர்த்த கலைகள் - மகேந்திரன் நூலாசிரியன் - இதனால் அறியப்படுவன. நூல் எழுதப்பெற்ற காலம் - சிறந்த குணங்கள். .

10. நரசிம்மவர்மன் - (கி.பி. 630-668) 108-129

பல்லவர் சாளுக்கியர் போர் - பல போர்கள்-சாளுக்கியன் ஓட்டம் - வாதாபி கொண்டது - சேனைத் தலைவர் பரஞ் சோதியார் - சாளுக்கியர் பட்டச்சான்று - வாதாபி கொண்டவன் பல்லவர் பாண்டியர் போர் - பட்டயங்கள் - போர் நடந்த காலம் - முடிவு - பல்லவர் கங்கர் போர் - உண்மை என்ன? - இலங்கைப் போர் 1 - இலங்கைப் போர் 2 - சீனவழிப்போக்கன் - குகைக் கோவில்கள் - மகாபலிபுரமும் நசிரம்மவர்மனும் - குகைக் கோவில்கள் - ஒற்றைக் கல் கோவில்கள் - கற்சிற்பங்கள்- கோட்டைகள் கட்டிய கொற்றவன் - பட்டப் பெயர்கள் - அக்கால அரசர் - பாண்டியர் பட்டியல்.

11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685) 130–142

இரண்டாம் மகேந்திரவர்மன் - பல்லவர் சாளுக்கியர் போர் - சாளுக்கியர் பட்டயங்கள்-பல்லவர் பட்டயங்கள்- ஆராய்ச்சி - போர் நடந்த முறை - போர் வருணனை - சாளுக்கியர் பாண்டியர் போர் - நெல்வேலிப் போர் - பல்லவர் கங்கர் போர் - கூரம் கோவில் - மகாபலிபுரம் - சிறந்த சிவபத்தன் - இவன் காலத்து அரசர்.

12. இராசசிம்மன் - (கி.பி. 685-705) 142–163

போர்கள் முன்னுரை - சாளுக்கியர் பட்டயங்கள் - பல்லவர் கல்வெட்டுகள் - போரிட்டவன் விநயாதித்தனே - இது தனிப்பட்ட போர்-பல்லவர் சாளுக்கியர் போர்-போரின் பயன்-பல்லவர்கங்கர் போர் - கொடிய பஞ்சம் - சிவபத்தன் ரணசயன் - வான் ஒலிகேட்ட வரலாறு - கோவில்கள் - கோவில் இலக்கணம் - கயிலாசநாதர் கோவில் - கோவில் இடமும் அமைப்பும் - இன்றுள்ள கோவிற் பகுதிகள் - முன்கோவில் - சுற்றுச் சுவர்கள். இறை இடம் - முன் மண்டபம் - உள்ளறை மண்டபப் புறச்சுவர் - சிறு கோவில்கள் 58 - கும்பம் - கல்வெட்டுகள் - சிறப்பு - வடமொழிப் புலவன் - நாடக அறிஞன். இவன் காலத்து அரசர் - இரண்டாம் பரமேசுவரவர்மன்.

13. புதிய பல்லவர் மரபு 164-168

சில செய்திகள் - வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் - இரண்யவர்மன் - புதிய மரபு என் வந்தது? - புதிய மரபரசர்.

14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) 169-183

வரலாற்று மூலங்கள் - பல்லவர் பாண்டியர் போர் - போருக்குக் காரணம் - உதயசந்திரன் - பல்லவர் சாளுக்கியர் போர் 1 - போருக்குக் காரணங்கள் - பட்டயங்கள் - உண்மை என்ன? - போர் நடந்த காலம் - போர் நடந்ததா? - நடந்த முறை - முடிவு படையெடுப்பின் பயன் - பல்லவர் சாளுக்கியர் போர் 2 - இரட்டர் பல்லவர் நட்பு - முதலாம் கிருஷ்ணன் - பல்லவர் கங்கள் போர் - பட்டயக் குறிப்புகள் - சமயப் பணி - கல்வி நிலை - பல்லவப் பேரரசு இவன் காலத்து அரசர்.

15. நந்திவர்மன் - (கி.பி. 775-825) 183-190

பிறப்பும் ஆட்சிக்காலமும் - சிறப்பும் மணமும் - இரட்ட அரசர் கிருஷ்ணன் 1 - துருவன் கோவிந்தன் போரட்டம் போர் - பல்லவர் இரட்டர்போர் 1 - பல்லவர் இரட்டர்போர் 11 - பல்லவர் இரட்டர்போர் 111 - பல்லவர் பாண்டியர் போர் - நந்திவர்மன் அரசியல் - சில பட்டயங்கள் - கோவில்கள் இவன் காலத்தரசர்.

16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850) 190-203

மரபு - பட்டயங்கள் - தெள்ளாறு எறிந்த காலம் - நந்திக்கலம்பகம் - இவன் கழற்சிங்கனா? - பல்லவர் இரட்டர் போர் பல்லவர் பாண்டியர் போர் - பல்லவர் தமிழரசர் - இப்போருக்குக் காரணம் என்ன? - பல்லவன் - காவிரிநாடன் - பேரரசன் - நல்லியல்புகள் - மனைவியர் - அரசியல் - திருப்பணிகள் - சிவனடியான் - இவன் காலத்து அரசர்.

17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882) 203-212

நிருபதுங்கவர்மன் - பல்லவர் பாண்டியர் போர் 1 - குடமூக்குப் போர் - பல்லவர் பாண்டியர் போர் 11 - ஈழநாட்டுப் படையெடுப்பு திருப்புறம்பியப் போர் - பழிக்குப்பழி - கோவில் திருப்பணிகள் - பிருதிவீ மாணிக்கம் - மாதேவி அடிகள் - நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்-திருத்தணிகைக்கோவில்-அபராசிதன் காலத்துத் திருப்பணிகள் - இக்காலத்தரசர் - பல்லவ மரபினர் - பிற்காலப் பல்லவர். .

18. பல்லவர் ஆட்சி 213–246

நாட்டுப்பிரிவு - அரசமுறை - அரசர் - பட்டப்பெயர்கள் - அரசரும் சமயநிலைமையும் - பல்லவர் இலச்சினை - பல்லவரது கத்வாங்கம் - அமைச்சியல் - உள்படு கருமத் தலைவர் - அறங்கூர் அவையம் - அரண்மனை அலுவலாளர் - பல்லவர் படைகள் - பண்பட்ட படைகள்- கடற்படை - நாடும் ஊரும் - ஊர் ஆட்சி - ஊர் அவைப் பிரிவுகள் - இராட்டிர ஆட்சி - சிற்றுள்கள் - பிரம்மதேயச் சிற்றுார்கள் - தேவதானச்சிற்றுர்கள் - சிற்றுார்க்கோவில்கள் - பள்ளிச்சந்தம் -ஏரிப் பட்டி - நிலவகை - பலவகை வரிகள் - தென்னை பனை முதலியன மருந்துச் செடிகள் - மருக்கொழுந்து முதலியன - பிற வரிகள் - பல்லவர் அரசாங்கப்பண்டாரம்-நில அளவை-நீர்ப்பாசன வசதிகள் - எரி வாரியம் - நீட்டல் அளவை - முகத்தல் அளவை - நிறுத்தல் அளவை பல்லவர் காசுகள் - பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்- பஞ்சம் ஒழிப்பு வேலை - அறப்பணிகள் உருவச் சிலைகள் - வீரக் கற்கள் - நீத்தார் நினைவுக் குறிகள்.

19. கலைக் கழகங்கள் 246-262

முன்னுரை - ஓவியசிற்பக்கலைக்கூடங்கள் - காஞ்சிக்கல்லூரிஎத்தகைய கல்வி? - கடிகாசலம் - பாகூர் வட மொழிக் கல்லூரி - மூன்று சிற்றுர்கள்-பாகூர்ப்பழம்பதி-அக்கிரகாரங்கள்-ஊராண்மை - படைக்கலப் பயிற்சி - வேலைகள் - பிரம்மபுரிகள் -பட்டவிருத்திகோவில்கள் - மடங்கள் - சைவமடங்கள் - காளாமுகர் - பாடத்திட்டம் - மடத்து ஆட்சிக் குழுவினர் - மடத்து ஆட்சி - பெளத்தர் கலை இடங்கள் - சமணர் கலை இடங்கள் பாதிரிப் புலியூர் மடம் - திருப்பருத்திக் குன்றம் தமிழ்க்கல்வி.

20. சமயநிலை 262-273

சமண வீழ்ச்சிக்குக் காரணம் - உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது? - சைவசமயம் - பாசுபதர் - காபாலிகர் - காளாமுகர் - வைணவம் - வைணவ வேந்தர் - சமயக் கொடுமை - சமணர் சைவர் கொடுமை - இவை நடந்தனவா? - வைணவர் கொடுமை - பட்டயச் சான்று - சிற்பச் சான்று - உயிர்ப்பலி இடுதல் - முன்னுரை - சிற்பங்கள் - சான்றுகள்.

21. இசையும் நடனமும் 273–284

இசை- மகேந்திரவர்மனும் இசையும் - இராசசிம்மனும் இசையும் - நாயன்மார் இசை - தேவார காலத்து இசைக் கருவிகள் - ஆழ்வார் அருட்பாடல்கள் - மகேந்திரன் கால நடனம் - வைகுந்தப் பெருமாள் கோவில் - அடிகள்மார் - சிவபெருமான் திருக்கூத்து - கயிலாசநாதர் கோவில் - நாதாந்த நடனம் - ‘தூக்கிய திருவடி’ நடனம்.

22. ஒவியமும் சிற்பமும் 284-291

சித்தன்னவாசல் - இடமும் காணத்தக்கனவும் - உருவச்சிலைகள் - நடனமாதர் ஓவியங்கள் - அரசன் அரசி ஓவியங்கள் - கூரையில் உள்ள ஓவியம் - இஃது எதனைக் குறிக்கிறது? உள்ளறை மேற்கூரை - இவற்றை எழுதிய முறை - பல்லவர் சிற்பம்.

23. பல்லவர் காலத்துக் கோவில்கள் 291-305

கோவிலும் கல்வெட்டும் - சங்ககாலத்துக் கோவில்கள்- தேவார காலத்துக்கோவில்கள் - பழைய கோவில்கள் - முதல் இடைக்காலக் கோவில்கள் - பிற்காலத்துக் கோவில்கள்- பழங்கோவில்-அமைப்பு திராவிடக் கலை - முடிவு.

24. இலக்கியம் 305-324

முன்னுரை - வடமொழிப் பட்டயங்கள் - வடமொழி நூல்கள் - அச்சுத விக்கிரந்தன்-அச்சுதன் மதுரை கொண்டது - முத்தரையரும் தமிழும் - இவற்றால் அறியப்படுவன - பல்லவரும் தமிழும் சிவத்தளி வெண்பா - பல்லவரைப் பற்றிய தனிப் பாடல்கள் - யாப்புநூல் பெருக்கம் - மூன்றாம் நந்திவர்மன் - அபராசிதவர்மன் - சத்தி பல்லவன் - இராச பவித்திரப்பல்லவதரையன்-பொதுப்பாடல் - வேறு பல நூல்கள் - சைவத் திருமுறைகள் - நந்திக் கலம்பகம் - பாரத வெண்பா - சேரமான் பாடிய நூல்கள்-முன்னுரை-அந்தாதிமும்மணிக் கோவை - ஞான வுலா - நாலாயிரப் பிரபந்தம் - பல்லவர் அவைப்புலவர்.

25. பல்லவர் கோநகரம் 324–331

நகர அமைப்பு - கெட்டிஸ்துரை கூற்று - பெளத்தர் தெருக்கள் - பிற தெருக்கள்-பல்லவமேடு முடிவுரை.

26. அரசர் பட்டியல் 332–335

(1) பல்லவர் காலத்துக்கங்க அரசர்

(2) பல்லவர் காலத்துக்கதம்ப அரசர்

(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்

(4) பல்லவர் காலத்துப் மேலைச் சாளுக்கியர்

(5) பல்லவர் காலத்துப் இராட்டிரகூட மன்னர்

மேற்கோள் நூல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பல்லவர்_வரலாறு&oldid=1517750" இலிருந்து மீள்விக்கப்பட்டது