யாப்பருங்கலம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

அமிதசாகரர்[தொகு]

இயற்றியருளிய

யாப்பருங்கலம் (மூலம்)[தொகு]

பாயிரம்[தொகு]

முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன்
செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கிப்
பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வாங்கி
யாப்பருங் கலம்நனி யாப்புற வகுத்தோன்
தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்
துளக்கறு கேள்வித் துகள்தீர் காட்சி
அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே.
-என்பது பாயிரம்.

சிறப்புப் பாயிரம்[தொகு]

(தெய்வவணக்கம்)
வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய
அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே.
(பாயிரம் முற்றியது)

உறுப்பியல்[தொகு]

1. எழுத்தோத்து[தொகு]

நூற்பா: 1 (எழுத்தசை)[தொகு]

(யாப்பு)

எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ(டு)
இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே.

நூற்பா: 2 (உயிரேமெய்யே)[தொகு]

(அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்)

உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
குறிலே நெடிலே அளபெடை யென்றா
வன்மை மென்மை இடைமை யென்றா
சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்(கு)
ஐம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே.

நூற்பா: 3 (தனிநிலை)[தொகு]

(ஆய்தம், ஒற்றிற்குச் சிறப்பு விதி)

தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே
அளபெடை அல்லாக் காலை யான.

நூற்பா: 4 (தளைசீர்)[தொகு]

(குறறியலிகரம், குற்றியலுகரம், உயிரளபெடைகட்கு ஓர் இலக்கணம்)

தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
அளபெடை ஆவியும் அலகியல் பிலவே.
(எழுத்தோத்து முடிந்தது)


2.அசையோத்து[தொகு]

(அசையின்வகை)

நூற்பா: 5 (நேரசை)[தொகு]

நேரசை யென்றா நிரையசை யென்றா
ஆயிரண் டாகி அடங்குமன் அசையே.


(நேரசை)

நூற்பா: 6 (நெடில்குறில்)[தொகு]

நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே.


(தனிக்குறில் நேரசை ஆகாத இடங்கள்)

நூற்பா: 7 (குறிப்பே)[தொகு]

குறிப்பே யேவல் தற்சுட் டல்வழித்
தனிக்குறில் மொழிமுதல் தனியசை யிலவே.


(நிரையசை)

நூற்பா: 8 (குறிலிணை)[தொகு]

குறிலிணை குறினெடில் தனித்துமொற் றடுத்தும்
நெறிமையின் நான்காய் வருநிரை யசையே.


(ஐகாரக்குறுக்கம் இணைந்த நிரையசை)

நூற்பா: 9 (ஈறுமிடையும்)[தொகு]

ஈறு மிடையு மிணைந்து மிணையசை
ஆகும்ஐ என்ப அறிந்திசி னோரே.


அசையோத்து முடிந்தது.


3.சீரோத்து[தொகு]

(சீர்களி்ன் பெயர்வேறுபாடு)

நூற்பா: 10 (இயற்சீர்)[தொகு]

இயற்சீர் உரி்ச்சீர் பொதுசசீர் என்றா
மயக்கற வகுத்த சீர்மூன் றாகும்.


(இயற்சீ்ர்)

நூற்பா:11 (ஈரசை)[தொகு]

ஈரசை கூடிய சீரியற் சீரவை
ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே.

(உரிச்சீர்)

நூற்பா:12 (மூவசைச்)[தொகு]

மூவசைச் சீருரிச் சீரிரு நான்கனுள்
நேரிறு நான்கும் வெள்ளை யல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.


(பொதுச்சீர்)

நூற்பா:13 (நாலசைச்)[தொகு]

நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே.


(ஓரசைச்சீர்)

நூற்பா:14 (ஓரைசைச்சீரு)[தொகு]

ஓரசைச் சீருமஃ தோரிரு வகைத்தே.


(சீர்கள் செய்யுளில் நிற்கும்முறை)

நூற்பா:15 (விரவியும்)[தொகு]

விரவியு மருகியும் வேறும் ஒரோவழி
மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.


(நேர்நடு வஞ்சியுரிசசீர்)

நூற்பா:16 (நிரைநடு)[தொகு]

நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்
கலியினோ டகவலிற் கடிவரை யிலவே.


சீரோத்து முடிந்தது


4. தளையோத்து[தொகு]

(தளையும் அதன் தொகையும்)


நூற்பா: 17 (சீரொடுசீர்)[தொகு]

சீரோடு சீர்தலைப் பய்வது தளையவை
ஏழென மொழிப இயல்புணர்ந் தோரே.


(வெண்டளை)

நூற்பா:18 (வெண்சீர்)[தொகு]

வெண்சீ ரொன்றலும் இயற்சீர் விகற்பமும்
என்றிரண் டென்ப வெண்டளைக் கியல்பே.


(ஆசிரியத்தளை)

நூற்பா: 19 (ஈரசைச்சீர்)[தொகு]

ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரொடு
நேரசை யொன்றல் நிரையசை யொன்றலென்
றாயிரு வகைததே யாசிரி யத்தளை.



(கலித்தளை)

நூற்பா: 20 (நிரையீறில்லா)[தொகு]

நிரையீறில்லா உரிச்சீர் மு்ன்னர்
நிரைவருங் காலை கலித்தளை யாகும்.


(வஞ்சித்தளை)

நூற்பா: 21 (தன்சீரிறுதி)[தொகு]

தன்சீ ரிறுதி நிரையொடு நேர்வரின்
வஞ்சித் தளையின் வகையிரண் டாகும்.


(தளைமயக்கம்)

நூற்பா: 22 (வெள்ளையுட்)[தொகு]

வெள்ளையுட் பிறதளை விரவா அல்லன
எல்லாத் தளையும் மயங்கி வழங்கும்.


தளையோத்து முடிந்தது



5. அடியோத்து[தொகு]

(அடியின் வகை)

நூற்பா: 23 (குறளடி)[தொகு]

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடி லடியெனக் கட்டுரைத் தனரே.


(முதல் நான்கடிகள்)


நூற்பா: 24 (குறளடி..இருசீ)[தொகு]

குறளடி சிந்தடி இருசீர் முச்சீர்
அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர்
நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே.


(கழிநெடிலடி)

நூற்பா: 25 (கழிநெடிலடியே)[தொகு]

கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்
அறுசீர் முதலா ஐயிரண் டீறா
வருவன பிறவும் வகுத்தனர் கொளலே.



(வஞ்சிப்பாவிற்குரிய அடி)

நூற்பா: 26 (சிந்தடி...என்றிரண்)[தொகு]

சிநதடி குறளடி என்றிரண் டடியான்
வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்.


(வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா அடிகள்)

நூற்பா: 27 (கலியொடு)[தொகு]

கலியொடு வெண்பா அகவல் கூறிய
அளவடி தன்னால் நடக்குமன் அவையே.


(பாவினங்களுக்குரிய அடி)

நூற்பா: 28 (பாவினம்)[தொகு]

பாவினம் எல்லா அடியினும் நடக்கும்.


(அடிமயக்கம்)

நூற்பா: 29 (இயற்சீர்வெள்ளடி)[தொகு]

இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை
அகப்பட வரூஉம் அகவலும் உளவே.


(கலிப்பாவில் பிற பா விரவுதல்)

நூற்பா: 30 (வெள்ளடி)[தொகு]

வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே.


(வஞ்சியுள் பிற பா மயங்கல்)

நூற்பா: 31 (வஞ்சியுள்)[தொகு]

வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்.


(பாக்களின் அடிச்சிறுமை)

நூற்பா: 32 (ஈரடிவெண்)[தொகு]

ஈரடி வெண்பாச் சிறுமை மூவடி
ஆசிரி யத்தொடு வஞ்சி எஞ்சிய
தீரிரண் டடியே இழிபென மொழிப.


அடியோத்து முடிந்தது.


6. தொடையோத்து[தொகு]

(தொடை)

நூற்பா: 33 (தொடையே)[தொகு]

தொடையே அடியிரண் டியையத் தோன்றும்.


நூற்பா: ()[தொகு]

நூற்பா: ()[தொகு]

நூற்பா: ()[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=யாப்பருங்கலம்&oldid=1475346" இலிருந்து மீள்விக்கப்பட்டது