அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/திரேதா யுகம்

விக்கிமூலம் இலிருந்து


அந்தப்பதியில் அலங்கரித்தநாள்கழித்து
ஆதிகயிலை அரனாரிடத்தில்வந்து
வேதியரும்நன்றாய் விளம்புவாரம்மானை
சூரபர்ப்பனென்ற சூரக்குலங்களைத்துணித்து
வீரம்பறைந்ததினால் மேலுமதயுகத்தில்
கொன்றுகிறேதா குவலயமுனானழித்து
முன்னுகலந்திருந்த ஆறுமுகவேசம்
சென்தூருவாரித் திரைமடக்கில்வாழ்ந்தீரென்று
வந்தோங்காணைய்யா மலர்பாதந்தெண்டனிட
என்றேதானாதி ஈசரோடெதுரைப்பார்
அன்றேதான் ஈசர் அருளுவாராயருக்கு
முன்னேகுறோணி முடிந்ததுண்டாறதிலே
இன்னுமூணுதுண்டு இருக்குதுகாண்மாயவரே
என்றீசர்சொல்ல எல்லோருந்தான்கூடி
அன்றிருன்ததுண்டம் அதிலொருதுண்டமதை
உருவாய்ப்படைத்து உருகொடுக்குமவ்வளவில்
அருகேயிருந்த அச்சுதருமேதுரைப்பார்
முன்னேயிவனும் முற்பிறப்பானதிலே
என்னோடே பாசி எதிர்த்தான்காண் ஈசுரரே
ஆனதாலிப்பிறவி அரக்கனிவன்றனக்கு
ஈனயில்லாச்சிரசு ஈரஞ்சாய்ப்படையும்
பத்துச்சிரசும் பத்துரண்டுகண்காதும்
தத்துவங்களோடே தான்படையுமென்றுரைத்தார்
மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து
வாய்ச்சிரசுபத்தாய் வகுத்தார்காணம்மானை
கூடப்பிறக்க குண்டிலிட்டரத்தமதை
வாடவரக்கர்குலமாய்ப் பிறவிசெய்தார்
அப்போபடைக்கும் அவ்வளவில்மாயவனார்
மெய்ப்பானமேனிதனில் வியர்வைதனையுரிட்டி
விபீசணனென்று மெய்யுருவந்தானாக்கி
கவுசலமாயரக்கன் தம்பியெனக்கருத்தாய்
கூடியிருந்து அரக்கன்குறியறிந்து
வேடிக்கையாக வீத்திரென்றுதானுரைத்தார்