கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/20. கலீலியோ டெலஸ்கோப் புதுமைக் கண்டுபிடிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

20. கலீலியோ டெலஸ்கோப் புதுமைக் கண்டுபிடிப்புகள்

★ இங்கிலாந்தில் ஜோசப் பிரீஸ்டிலி தோன்றி பிராண வாயுவைக் கண்டு பிடித்தார். இந்த உயிர்க்காற்று எவ்வளவு அவசியம் மனிதனுக்கு என்பதை விளக்கவா வேண்டும்.

★ பிரஞ்சு மேதை அந்தோணி லாவஸ்யர் நவீன ரசாயனத்தின் வகைகளுக்குத் தந்தை என்று போற்றப்படுவதற்கு அவரது கண்டுபிடிப்புகளே காரணம்!

★ இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன், அணு சக்தி தத்துவத்தைத் தோற்றுவித்து, அதற்குரிய கருவிகளைத் தயாரித்தார். அணுவே, ஒரு பொருளின் மிகச்சிறிய துகள் என்று அவர் கண்டார்.

★ ஜெர்மன் நாட்டு ஜஸ்டஸ் வான்லை! என்பவர் செயற்கை உரம் தயாரிக்கும் வழியைக் கண்டார். அதனால் விவசாய உலகம் பொன்னுலகமானது.

★ போலந்து நாட்டு மாதரசி மேரி கியூரி, அவரது கணவர் பிரான்ஸ் நாட்டின் பியரி கியூரி இருவரும் சேர்ந்து ரேடியம் என்ற மாமருந்து பொருளைக் கண்டு பிடித்தார்கள். இந்த ரேடியம், நோய்களைத் தீர்க்கவும், அணு அமைப்பைக் கண்டு பிடிக்கவும் அளவு கடந்த வகையில் பயன்பட்டு வருகிறது.

★ இங்கிலாந்து நாட்டில் தோன்றிய சார்லஸ் டாவின், உயிரினத் தோற்றம் Origin of The Species என்ற புகழ்மிக்க புத்தகத்தை எழுதி, உயிரினம் எப்படி படிப்படியாக வளர்கிறது என்று வாதத்தை உலகின் முன்பு வைத்தார்.

★ ஆஸ்திரியா நாட்டின் கிரிகோரி மெண்டல் என்பவர், மக்கள் இனப் பாரம்பரியம் விதிகளை வகுத்துத் தந்தார்.

★ பயங்கரமான வைசூரி நோயைத் தடுக்க இங்கிலாந்து நாட்டு எட்வர்டு ஜென்னர், அம்மை குத்தும் மருந்தும் அதன் கிருமிகள் ஒழிப்பு முறைகளையும் கண்டார்.

★ பிரான்ஸ் நாட்டு லூயி பாஸ்டர், வியாதிகளுக்குக் காரணம் நுண்கிருமிகளே என்ற தத்துவத்தைக் கண்டறிந்தார்.

★ ஜோசப் லிஸ்டரி என்ற ஆங்கில் ரண சிகிச்சை நிபுணர், தொத்து நோய் பரவாமல் இருக்க தடுப்பு மருந்தை முதன் முதலாகக் கண்டு பிடித்துப் பயன்படுத்தினார்.

★ க்ஷயரோகம் அல்லது காசநோய்க் கிருமிகளை, ஜெர்மனி நாட்டு வித்தகர் ராபர்ட் தோசி என்பவர் அவற்றை நோயிலே இருந்து தனியாகப் பிரித்தெடுக்கும் வழியைக் கண்டு பிடித்தார்!

★ இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்,நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன என்ற புதிய விதியை ரஷ்சிய விஞ்ஞானியான எல்லி மெஷ்னிகாப் என்றவர் கண்டறிந்துக் கூறினார்.

★ ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வில்லியம் ரோண்ட்ஜன், எக்ஸ்ரே என்ற விஞ்ஞானக் கருவியைக் கண்டு பிடித்து உலக சுகாதார இயக்கம் பரவ வழிகாட்டினார்.

★ மஞ்சள் காமாலை நோயை ஒழிக்க, பல பரிசோதனைகளை நடத்தியவர் வால்டர் ரீம் என்ற அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி!

★ இங்கிலாந்து நாட்டுக்காரரான அலெக்சாண்டர் பிளம்மங் பென்சிலின் என்ற ஊசிக்குரிய மருந்தைக் கண்டு பிடித்தார். இந்த மருந்து எண்ணற்ற மக்களைக் காக்கும் நோய்த் தடுப்பு ஊசியாக இன்றும் உள்ளது.

★ நீரிழிவு என்ற நோய்க்கு ஏற்ற இன்சுலின் எனற மருந்தைக் கனடா நாட்டைச் சேர்ந்த பிரடிரிக் காண்டிங் என்பவர் கண்டு பிடித்தார்!

★ ஜோனஸ் சால்க என்ற அமெரிக்க மருத்துவ ஞானி, இனம்பிள்ளை வாதம் என்ற நோயைத் தடுக்கும் ஊசி மருத்தைக் கண்டு பிடித்தார்.

★ கம்பியின் வழியாகத்தான் மின்சாரம் பாயும் என்ற விதியை, இத்தாலி நாட்டினரான லூசி சால்வனி என்பவர் கண்டறிந்துக் கூறினார்!

★ இத்தாலி நாட்டினரான அலெஸ்ஸாண்டிரோ கோல்டா என்பவர், மின்சார மோட்டரைத் தயாரித்துக் காட்டி நாட்டு வழக்கிலே நடமாடவிட்டார்!

★ டைனமோ என்ற கருவியை ஆங்கிலேயரான மைக்கேல் பாரடே முதன் முதலாகக் கண்டு பிடித்துக் காட்டினார். அதன் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் வழி காணப்பட்டது.

★ அமெரிக்கரான ஆல்பர்ட் மைகேல்சன் என்பவர் ஒளியின் வேகத்தை அளந்து காட்டினார்!

★ அணுவின் மையத்தை மின்னனுக்கள் சற்றிச் சுற்றி வருகின்றன என்பதை நியூசிலாந்து நாட்டு விஞ்ஞானி எர்ன்ஸ்ட் ரூதர்ஃபோர்டு என்பவர் கண்டு பிடித்தார்!

★ அணுவைப் பிளக்க முடியும் என்ற தத்துவத்தை, ஆஸ்திரியா நாட்டுக்காரரான லைஸ் மீட்னர் என்பவர் ஆராய்ந்து வெளியிட்டார்.

★ அண்டகோளம் வளைவானது என்ற தத்துவத்தை அமெரிக்கக் குடிமகனாக உரிமை பெற்ற யூத விஞ்ஞானி ஆல்ரபர்ட் ஈன்ஸ்டின் என்ற விஞ்ஞான மேதை சார்பு நிலைத் தத்துவம் RELATIVTY என்பதன் மூலமாகக் கண்டறிந்து நிலை நாட்டினார்.

அணு என்பது எப்படி அமைந்துள்ளது என்பது பற்றி, டென்மார்க் விஞ்ஞானி நில்ஸ் போர் என்பவர் தீவிர ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சிறு உருவில் அமைந்த சூரிய கோளம் போல இருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

★ மேலும் எண்ணற்றக்கண்டு பிடிப்புக்கள் தோன்றி விஞ்ஞான உலகுக்கு புகழும், பெருமையும் தேடிக் கொடுத்துள்ளன. அவற்றை எல்லாம் தொகுத்தால் புத்தகம் பெருகும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொளிகிறேன்

★ மேற்கண்ட விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் எல்லாமே, மாமேதை கலீலியோ கண்டுபிடித்து விஞ்ஞான உலகுக்கு வழங்கிய விஞ்ஞான "தொலை நோக்கியான" தூரதரிசினி தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாததாகி விட்டது.

மேலே கூறப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவராவது; "பார்வைக் குழாய் பெருக்கி, சுருக்கி இல்லாமல் எந்த நுண் பொருளையாவது பார்க்க முடியுமா? ஆராய்ச்சி தான் செய்ய முடியுமா?

நியூட்ரான், புரேட்டான், மின்னணுக்கள் போன்ற கண்டுபிடிப்புகளில் உள்ள அணுக்கள் மிகமிக நுட்பமான பூதக் கண்ணாடி மூலம் கூடக் காண முடியாத அணுக்களாகும். அந்த அணுக்களை அடிக்கடி பார்த்து ஆராய்ச்சி செய்திட கலீலியோ கண்டு பிடித்த பார்வைக் குழாய் கண்ணாடி வில்லைகளின் உருப் பெருக்கியும் உருசுருக்கியும் இல்லாமல் முடியுமா? வாசகர்கள் நன்கு சிந்திக்கவே மேற்கண்ட பட்டியலைத் திரட்டி வழங்கினோம்!

எனவே, கலீலியோவின் காலமான 1564-ஆம் ஆண்டு முதல் ஆல்பிரிட் ஈன்ஸ்டின் காலம் வரையிலும், தற்போதுவுள்ள விஞ்ஞான உலக வித்தகங்களின் வளர்ச்சிக் காலம் ஈறாக, கலீலியோவின் டெலஸ்கோப் என்ற தொலை நோக்கிப் பார்வைக்குழல், இல்லாமல் எவரும் எந்த ஆராய்ச்சியும் செய்திருக்க முடியாது என்ற நிலைதான் உண்மையான முடிவாகும்.

எனவே, மனிதனின் விஞ்ஞானச் சாதனைகள் மென்மேலும் அதிகரித்தாலும், அவனது தார்மீக உணர்ச்சி மட்டும் உயராதது ஒரு பெரிய பிரச்னையாக அன்று முதல் இன்றுவரை இருந்தே வருகிறது.

இந்த உண்மை உணர்வைத்தான், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், என்ற உலகம் போற்றும் விஞ்ஞானி, தான் மரண வாயிலில் இருந்த போது, அணுவைக் கண்டு பிடித்தது எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ஆனால் மனிதன் மனம் மட்டும்தான் மாறவில்லை’ என்று கூறிவிட்டுக் கண்ணீர் சிந்தி கவலைகளோடு உயிர் விட்டார்.

இப்படிப்பட்ட மனம் கொண்ட மனிதர்கள், கலீலியோ காலத்திலும் இருந்தார்கள், ஆதனால்தான், அவர் இறந்தபோது கலீலியோவுக்கு யாரும் நினைவுச் சின்னம் எழுப்பாமல் அக்கால மக்கள் அலட்சியமாக அவரது உழைப்பை அவமரியாதை செய்து விட்டார்கள்!

அதற்கு அந்த அறியாமைப் பிறவிகள் அறிவித்தக் காரணம், கலீலியோ சிறையிலே மாண்டார் என்ற ஒரு விசித்திரமான காரணமாகும் சிறையிலே, செத்தவர்கட்கு எல்லாம் நினைவுச் சின்னம் அமைக்கக் கூடாது என்றால், உலகத்தின் அறிவுத் தியாகத்திற்கு சிலைகளே வைக்க முடியாதே! பாராட்டிப் போற்ற முடியுமா?

ஆனால் பிற்கால உலக அறிவாளிகள், கலீலியோ காலத்து அறிஞர்களை அவமானப்படுத்தும் வகையில் கலீலியோ என்ற ஒரு மாபெரும் மனித மேதைக்கு, விஞ்ஞான விந்தைகளை உருவாக்கிய வித்தகனுக்கு, அறிவியல் உலகத்தில் தனக்கென்ற ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட அற்புத தியாகிக்கு, அவர் இறந்த பின்பு உடல் புதைக்கப்பட்ட பிளாரன்ஸ் என்ற நகரிலே, அறிவுள்ள மக்கள் அவருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து கண்ணீர் சிந்தியபடியே பாராட்டினார்கள்!

அறிவியல் உலகுக்கு முதன் முதலாக சில விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூலமாக, அறிவியல் கருவிகளை வழங்கி, எதிர்கால உலகுக்கு ஒரு மனப்படமாக மட்டும் அல்ல; மனப்படமாக அமைந்து விட்ட மாபெரும் வானவியல் அறிஞரான கலீலியோ கலீலீயிக்கு நாமும் புகழ் அஞ்சலியைச் செலுத்தி வணங்குவோமாக?