இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
அணி ய று பது
ஒர் அறிவு உயிர்களிடத்தும் பேரருள் புரிந்து வரு பவர் தெய்வத் திருவருளை அடைந்தவ ராகின்றார்.
- வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
- வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்;
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
- நேருறக் கண்டுளம் துடித்தேன்;
ஈடில் மானிகளாய் ஏழைகள் ஆய்நெஞ்சு
- இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
{{Right|(அருட்பா)}
இராமலிங்க அடிகளிடம் அமைந்திருந்த அருள் நீர்மையை இதனால் இனிதே அறிந்து கொள்கிறோம்.
- எவ்வுயிரும் என்உயிர் போல் எண்ணி இரங்கவுநின்
- தெய்வ அருட்கருணை செய்யாய் பரா பரமே! ::இறைவனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு
அருள் நலனை அருளுமாறு வேண்டி யிருக்கிறார்,
தண்ணளியாளர்கள் புண்ணிய சீலர்களாய்த் திகழ்ந்து எண்ணரிய நலன்களை எய்துகின்றனர்.
- தன் கண்ணில் கருணை கனிந்துவரின் அந்த மனி தனிடம் தனியே மகிமை சுரந்து வருகிறது. ஆகவே அருள் கண்ணுக்கு அணி என வந்தது.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்;அஃதின்றேல் புண்என்று உணரப் படும்.
(குறள் 575
)
- இரங்கி யருளும் இரக்கமே கண்ணிற்கு அணி
கலம்; அந்த அருள் இல்லையேல் அது புண்ணே என்-