120
காற்று வீசாதபோது வேண்டுமானால் விசிறி கொண்டு காற்றைப் பெறலாம். விசிறியினால் வரும் காற்றைத் தடுக்கலாம், விசிறியை வீசி எறிவதால். ஆனால் காற்று இயற்கையாக வீசுவதைத் தடுக்க, ஏன் என்று கேட்க எவரால் முடியும்?
🞸🞸🞸
காஞ்சியிலே உள்ள பெரிய தேரிலே ஒரு மானை அமர வைத்துத தேரைக் கவனியாதே; மானைப்பார். அதன மருளும் விழிகளைப் பார்; அதன் உடலிலே உள்ள புள்ளிகளைப் பார் காதுகளைக் கவனி; என்றால் எத்தனைபேர் காண்பார்--காணமுடியும்; இது போலத் தானே புராணங்களில், பயனைத் தேடி அலைவதும்.
🞸🞸🞸
பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்டமுடியாது. அவர்கள் தீட்டியான பிறகு கோபிப்பது வீண்கவலை,
🞸🞸🞸
இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது--கவனிப்பாரற்றுக் கிடக்கிறது எழில் மிக்க விதவையைப் போல.
🞸🞸🞸
துவக்கத்திலே, பயன் பெரிதாகவும், தரம் சிறிதாகவும் இருக்கலாம். பயன் பெருகப் பெருக தரத்தைத்தானே உயர்த்திப் பண்படுத்திட முடியுமே!
🞸🞸🞸