பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிஞ்சு நெஞ்சரங்கில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் விவேகானந்த சுவாமிகளும் பாபுவின் ஆதாரனையை ஏற்பதற்கும், அவனிடம் மின்சகதியாகப் புதியதொரு வல்லமைபீறிட்டுப் பாய்வதற்கும் கனகச்சிதமாக இருந்தது. மகததில் விளைந்த நெகிழ்ச்சியில், கண்களிலே முத்தங்கள் விளைகின்றனவே! காற்சட்டையின இடது பக்கப் பையை ஒரு பதட்டத்தோடு சோதித்தான். அந்தக் கடிதம் அவனைத் துறந்தோ, மறந்தோ எங்கேயும் போய்விடமுடியாது!

வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம்தான்!

இளவரசுப் பட்டம் பாபு எதற்காகவோ தனக்குத் தானே-தன்னில்தானே அமர்க்களமாகவும் அட்டகாசமாகவும் புதிராகவும் சிரித்துக்கொள்கிறான்

ரஞ்சித் கவலைமிஞ்சி, மனையாட்டியை நோக்கினார்.

ரஞ்சனியோ ஆதங்கம் அலைபாய, கைப்பிடி நாயகனைப் பார்த்தாள்.

அப்பா- அம்மாவின் அந்தரங்கமான பார்வைப் பரிவர்த்தனையின் முன்கதைச் சுருக்கத்தை அறியாதவனாக, அவர்கள் இருவரையும் ஒரு விநயத்துடன் நயமாகவே பார்த்துவைத்தான் பாபு.

‘பாபு முசுடாச்சுதே? என் இஷ்டப்படி இவன் இங்கேயே இனிமேலே தங்கிறத்துக்குச் சம்மதிக்க மாட்டானே, என்னவோ?--ரஞ்சித்தின் குறை இது.

“பாபு விதியாட்டமே சிரிக்கிறதைப் பார்க்கையிலே, நெஞ்சுக்கு நீதி கிடைக்கிறதுக்குப் பதிலா, பயமில்ல கிடைச்சிடும் போலிருக்குது? எங்களோட ஆசைக்கனவுப் பிரகாரம் எங்க பாபு எங்ககூட இங்கேயே தங்கிக்கிடுறத்துக்குச் சம்மதிக்கமாட்டானே?-பித்துக்கொண்ட பெற்ற மனம் இப்படியாகத்தானே ஏங்கிற்று.

118