பக்கம்:அன்னை தெரேசா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 1962 : :3 பாரதச் சமுதாயத்தில் அம்மை தெரேசா ஆற்றி வந்த ஏழை நலப் பொதுப்பணிகளைக் கெளரவிக்கும் பொருட்டு இந்திய அரசு பத்மபூரீ' என்னும் விருது வழங்கியது. - விருதினே வழங்கிய அப்போதை யக் குடியரசுத் தலைவரான உலகத் தத்துவ மேதை டாக்டர் இராதா கிருஷ்ணன் அன்னை தெரேசா அவர்கள். வேண்டப் படாமல் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் உடல் ஊனமுற்ருேர் களுக்கும் திக்கற்ற ஏழை எளியவர்களுக்கும் உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அபலே களுக்கும் அடைக்கலம் தந்து காப்பளிக்கும் ஓர் அன்புச் சரணுலயமாகவே விளங்கு கிருர்கள்!” என்று மனம் நெகிழ்ந்து பாராட்டினர். குடியரசுத் தலைவரைப் போலவே, பாரதத்தின் பிரத மராக அமைந்த நேருஜியும் அப்போது மன நெகிழ்ச்சி அடைந்தார். அதே 1962-ம் ஆண்டில் தியாகத் திருவிளக்காம் அன்பின் அன்னை தெரேசாவுக்கு ரேமென் மாக்சேசாய்” (Ramon Magsaysay) tufisma. & ?sstilis»usirsiv grılış gör தலைவர் மார்க்கோஸ் வழங்கிய காலையில், அகில உலக நாடுகளிடை அன்னைஆற்றிவரும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகள் உலகத்தை வாழவைக்கும்: உயிர் வாழும் புனிதை, ஞானி அன்னை தெரேசா!' என்று சிறப்பித்தார். 1971-ல் போப் ஆண்டவர் இருபத்திமூன்ருவது ஜான் அவர்களின் உலக அமைதிப் பரிசிலை போப் ஆண்டவர் ஆருவது பால் அன்னைக்கு வழங்கினர். "நல்லன்பிற்கும். தன்னம்பிக்கைக்கும் துரதர். தெரேசா அன்னை' என்று புகழ்ந்தார் - ; :: * * * : * . . . . . . . * : *...* * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/122&oldid=736258" இலிருந்து மீள்விக்கப்பட்டது