பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


'அவன் பேச்சை மட்டும் எடுக்காதீங்க...'

'அவன் நல்லவனா இருக்கானே பாட்டி.'

தங்கமானவன்...அவன் சம்சாரமும் குணசாலி... எவ்வளவோ அன்பாத்தான் என்னை கூப்பிடறாங்க...ஆனா ...

'என்ன அ னாவும் ஆவன்னாவும்'

'அவன் என் மகனில்லிங்க...'

'உன் மகனில்லையா.. உனக்கென்ன வள்ளி சொன்னதுபோல, மூளை குழம்பி இருக்குதா..... உன் மகன் இல்லையா...'

'நான் பெத்தற்றவள்தான். ஆனா...டாக்டரய்யா இதை மனசோடே போட்டுவையுங்கோ. முக்கியமா அவனுக்குத் தெரியப்படாது. தெரிந்தா குடும்பத்துக்கே ஆபத்து. நான்தான் பெத்தேன். ஆனா, அவன் பேய் மகன்'

"பைத்தியமேதான் உனக்கு. பேய் மகனாவது பூதத்தின் மகனாவது... என்ன கிழவி உளறிக் கொட்டறே."

"உங்களுக்கெல்லாம என்ன தெரியும்? இந்தக்காலத்துப் பிள்ளைங்க. சன்னாசி, பேய்க்குப் பொறந்தவன். அவனுக்கும் தெரியாது. கிராமத்திலே யாருக்கும் தெரியாது. இப்ப உங்ககிட்டே சொல்கிறேன் பேய்க்குப் பொறந்தவன் சன்னாசி. அதனாலேதான், பொறந்த மூணா மாசமே அவனை என் தங்கச்சிக்குத் 'தத்து' கொடுத்து விட்டேன்."

"பாட்டி! உனக்கு மூத்தமகன் அக்கரை போயிட்டதுக்குத்தானே மூளை குழம்பியிருக்கு...