12
அறிவியல் திருவள்ளுவம்
புலம்" எனும் இரண்டு சொற்களையும் முன்னே வைத்துள்ளார்.
இதற்குப் பொருள் விரித்த பரிமேலழகரும்,
"கவிதை-கவியின் தன்மை. அஃது ஈண்டு செய்யுள் மேல் நின்றது” என்றார். இது, 'செய்யுள்' என்னும் சொல்லுக்குரிய மாற்றுச் சொல்லாகக் 'கவிதை' என்பதைக் காட்டியதாகும்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலத்தில்,
"செந்தமிழ் தேற்றாதான் கவிசெயல்
நாடின் நகை"[1]
என்பதில் 'கவி' என்னும் சொல் உள்ளது. இதனை எழுதியவர் காரியாசான் என்பவர்.
கவிதை - தமிழ்ச்சொல்
'கவிதை, கவி'- என்னும் சொற்கள் பற்றி ஓர் ஐயம் எழலாம். பரிபாடலிலும், மாமூலத்திலும் பல வட சொற்கள் உள்ளன. அவைபோன்று 'இவையிரண்டும் வடசொற்கள் ஆகாவோ(?) என்று வினவலாம். இந்த ஐயம் தோன்றி, நிலைத்து, உறுதியான முடிவாக வடமொழிதான் என்று இக்காலத்தில் கருதப்படுகிறது.
பாரதிதாசனார் புரட்சிக் கவிஞர் என்று புகழப் பட்டவர். இப்புகழ் மொழியில் உள்ள 'கவிஞர்' என்பதை
- ↑ காரியாசன் : சிருபஞ்சமூலம் - 12