பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. அவள் யார்?


துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து விடவில்லை, ரேவதி. அவளிடம் இல்லாத துப்பாக்கியா? அதோடு, பயம் என்பதும் அவள் அறியாத ஒன்று. பயந்து பயந்து ஒரு பெண்-அதுவும் தனித்து இருக்கும் சிறு பெண்-இந்த உலகில் எவ்வாறு வாழமுடியும்?

ரேவதி தனக்கே உரிய அகங்காரத்தோடு சிரித்தபடி, “இப்ப உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டாள்.

"நீங்கள் கழுத்தில் போட்டிருக்கிற சங்கிலி வேணும்!"

அவ்வளவு தானே?”

"ஆமாம்!”

உண்மையிலேயே இவன் முகமூடிக் கொள்ளைக்காரன் தானா? என்று அவளுக்கு ஒர் ஐயம் தோன்றியது. முக மூடிக் கொள்ளைக்காரனுக்கு தங்கச் சங்கிலியும் தாலியும் ஒன்றுதானே?

"நீ யாராக இருந்தால் எனக்கென்ன? ஆனாலும், நீ மிருகமாகி, விலை மதிக்க முடியாத என்னோட கற்பைச் சூறையாட நினைக்காமல் இருந்தவரையிலும், மனிதன் தான்! நான் உயிரோடு இருக்கிறவரை, சங்கிலியை உன்னாலே பறிச்சுக்கிட முடியாது. சரித்திரம் வேணும். அதனாலே,